சைட்டத்தை தடை செய்வதே இறுதி தீர்மானமாக இருக்க வேண்டும்- GMOA

241 0

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பாக அரசாங்கம் அடுத்த வாரம் எடுக்கவுள்ள தீர்மானம் அதனை தடை செய்வதாகவே அமைய வேண்டும் என அரச மருத்து அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அந்த சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.

அதனை விடுத்து சைட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்டும் வேறு எந்த தீர்மானங்களையும் ஏற்று கொள்ளப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சைட்டம் தொடர்பில் அடுத்த வரும் அளவில் தீர்வு ஒன்று பெற்று கொடுக்கப்படும் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment