நாட்டை முன்னேற்றும் நடவடிக்கையில் அரசாங்கம் – பிரதமர்

228 0

ஸ்திரமான பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு சிறந்த நாட்டை முன்னேற்றும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு ஏற்ற வகையில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்த பிரதமர், சீன மற்றும் இந்தியாவுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்காசிய மற்றும் தென்கிழக்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் சீனாவும் தாய்லாந்தும் மேம்பட்ட நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நாடுகள் இலங்கையின் சராசரி தரத்தைவிட உயர்ந்தளவில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய இலங்கை பொருளாதார கொள்கையினை மேம்படுத்த சர்வதேச ரீதியாக நாடுகளுடன் திறந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வது சாலச்சிறந்தது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a comment