இந்தியாவில் இருந்து மாலைத்தீவை நோக்கி பயணித்த கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளது.
காலியில் இருந்து சுமார் 65 மைல்கள் தொலைவில் இந்த கப்பல் மூழ்கியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பல் கடலில் மூழகிய பின்னர் பாதுகாப்பு படகில் இருந்த அதன் 7 பணியாளர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் அவர்கள், டோரா படகின் ஊடாக காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

