விளக்கமறியல்- அரம்பேபொல ரதனசார தேரர்

233 0

மியன்மார் ஏதிலிகளுக்கு எதிராக அண்மையில் கல்கிசை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைதான சிங்களே தேசிய இயக்கத்தின் பொது செயலாளர், அரம்பேபொல ரதனசார தேரர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று நீட்டம்புவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர், காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

மியன்மாரில் இடம்பெற்ற இன வன்முறைகளை அடுத்து அங்கிருந்து இலங்கைக்கு வருகைத் தந்த ஏதிலிகள் கல்கிசையில் உள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 26 ஆம் திகதி அந்த பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக 7 பேர் கைது செய்யப்பட்டநிலையில், அவர்களில் 2 பேர் ஏற்கனவே இந்த மாதம் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment