புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் இன்று கைது!

229 0

பொலனறுவை உயனப் பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் இன்று(20) கைது செய்யப்பட்டனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் மீட்டனர். விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment