அநுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு தமது வழக்கு மாற்றப்படும் வரையில் உணவு ஒறுப்புப் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று, அரசியல் கைதிகள் நேற்றிரவு தெரிவித்தனர்.
4 வருடங்களாக வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கை அநுராதபுரம் நீதிமன்றுக்கு இடமாற்றியதை எதிர்த்து மூன்று தமிழ் அரசியல் கைதிகள் கடந்த மாதம் 25ஆம் திகதி உணவு ஒறுப்புப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இவர்களது உறவினர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் என்ற இருதரப்புக்களும் ஜனாதிபதி மைத்திரிபாலவை நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தன.
இந்தப் பேச்சுக்களின் உறுதியான முடிவு வழங்கப்படாததைச் சுட்டிக்காட்டிய தமிழ் அரசியல் கைதிகள், தமது வழக்கு மாற்றப்படும் வரையில் உணவு ஒறுப்புப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று தெரிவித்தனர்.