கலந்துகொள்வது தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது – மஹிந்த

278 0

Mahinthaகுருநாகலில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்;சியின் 65 வருட பூர்த்தி நிகழ்வில் தாம் கலந்து கொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பார்வையிடுவதற்காக அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.
இதன்பின்னர், ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், வருட பூர்த்தி நிகழ்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பில் தமக்கு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
எனினும் இதில் கலந்துகொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் தமது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடி வருவதாக தெரிவித்துள்ளார்.
கட்சியின் அமைப்பாளர்கள் பதவியில் இருந்து உறுப்பினர்கள் நீக்கப்படும் போது எந்த மனோபாவத்துடன் வருடப்பூர்த்தி நிகழ்வில் கலந்து கொள்வது? என்ற சிந்தனை எழுந்துள்ளதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.