கிண்ணியாவில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

307 0

arr190801திருகோணமலை கிண்ணியா முனைச்சேனை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிண்ணியா விசேட காவற்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைதானவர்களில், ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவரும், இடைநிறுத்தப்பட்ட காவற்துறை உத்தியோகத்தர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.