வசீம் தாஜுதீன் வழக்கு: ஆனந்த சமரசேகரவுக்கு பிணை

302 0

நீதிமன்றில் இன்று (19) சரணடைந்த முன்னாள் கொழும்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பான சாட்சியங்களை அழித்து குற்றவாளிகளை தப்பிக்க முயற்சித்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் கொழும்பு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர இன்று தனது சட்ட அதிகாரியினூடாக கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார்.

றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை விவகாரத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் தம்மை கைது செய்ய தயாராகவுள்ளதாகவும், இதற்கமைய தனக்கு உரிய முறையில் முன் பிணை வழங்குமாறு மனுவொன்று தாக்கல் செய்து அவரது சட்டத்தரணியுடன் ஆஜராகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment