நாமலை விடுவிக்க கூடாதென நாம் கடிதம் அனுப்ப வில்லை- மஹிந்த

344 0

நாமலுக்குப் பிணை வழங்கக் கூடாதென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து எந்தவொரு கடிதமும் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படவில்லையெனவும், அவ்வாறு கூறும் செய்தியில் எந்தவித உண்மையும் கிடையாது எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஐ.ம.சு. முன்னணியிலிருந்து கடிதமொன்று செல்வதாயின் அதில் தான் கையொப்பமிட்டிருக்க வேண்டும். அல்லது ஜனாதிபதி அதில் ஒப்பமிட்டிருக்க வேண்டும். எங்களில் எவரும் அவ்வாறானதொரு கடிதத்தில் கையொப்பமிடவில்லையெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

நாமல் எம்.பி.யிற்கு இன்று பிணை வழங்கக் கூடாதென ஐ.ம.சு.மு.யிலிருந்து முக்கிய நபர் ஒருவரின் கையெழுத்தில் கடிதமொன்று நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டளஸ் எம்.பி. இன்று தெரிவித்திருந்தார். இது குறித்து அமைச்சரிடம் கேட்டதற்கே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment