போதைபொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

332 0

திருகோணமலை துறைமுக காவற்துறை பிரிவிற்குற்பட்ட தபால் நிலைய வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஊழியராக கடைமையாற்றும் 25 வயதுடையவரிடம் இருந்து கேரளா கஞ்சாவும் புகையிலையும் கலந்த புதிய வகையான போதை பொருள் திருகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.

நேற்று மாலை கைது செய்யப்பட்ட இவர் மூதூர் ஜின்னாநகர் பிரதேசத்தில் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் துறைமுக காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment