நபரொருவர் பாரவூர்தியில் தூக்கிட்டு தற்கொலை

1145 0

ஹரிஸ்பத்துவ பிரதேச சபையில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நபரொருவர் அவர் பணிபுரியும் வாகனத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கட்டுகஸ்தொட கொஹாகொட வீதியில் இருந்து குறித்த பாரவூர்தி மற்றும் தற்கொலை செய்துக்கொண்டவரின் சடலம் காவற்துறையால் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா , நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய எஸ்.பெருமாள் என்ற நபரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம ்இதுவரை கண்டறியப்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தொட காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment