தீர்வின்றி 223 ஆவது நாளாக் தொடர்கிறது உறவுகளின் போராட்டம்

347 0

தமது உறவுகளுக்கு தீர்வு கிடைக்கும்வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில்  கடந்த மார்ச் மாதம் 8 ம் திகதி ஆரம்பித்த போராட்டம்  இன்றும்  முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக 223   ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது சரணடைந்த,இராணுவத்திடம் கையளித்த  கைதுசெய்யப்பட்ட மற்றும் யுத்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகள் தொடர்பில் உரிய தீர்வை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களின் போராட்டத்துக்கு எந்தவித பதில்களும் கிடைக்காத நிலையில் அடை மழைக்கு மத்தியிலும் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

Leave a comment