போதை மாத்திரைகளுடன் அம்பாறையில் ஒருவர் கைது!
பெருந்தொகை போதை மாத்திரைகளுடன் அம்பாறையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காரொன்றில் 23,400 போதை மாத்திரைகளுடன் பயணித்த போதே, இவர் இவ்வாறு கைதாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஒருவராகும். இவரை அம்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

