கொழும்புக்கு அஸாத் சாலி – அமைச்சர் நிமல் சிறிபால நம்பிக்கை

Posted by - December 23, 2017

இம்முறை உள்ளூராட்சி சபையின் கொழும்பு மாநகர சபைக்கு மிகுந்த அரசியல் அனுபவங்களைக் கொண்ட முன்னாள் பிரதி மாநகர மேயர் அஸாத் சாலியையே கட்சி நியமித்துள்ளது என ஸ்ரீல. சு. கட்சியின் உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீல. சு. கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இம்முறை உள்ளூராட்சி சபை தேர்தலில் ஸ்ரீல. சு. கட்சியின் சார்பில் 123 பேரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்

கட்சியை தாரைவார்க்க வேண்டாம்- டிலானுக்கு துமிந்த அறிவுறுத்தல்

Posted by - December 23, 2017

இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ள கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தே அன்றி கட்சியினுடையது அல்லவெனவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எவரும் தாரைவார்க்க வேண்டாம் எனவும் ஸ்ரீ ல.சு.க.யின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தெஹிஅத்தகண்டி மற்றும் பதியதலாவ ஆகிய பிரதேச சபைகளுக்கு ஸ்ரீ ல.சு.க.யினால் முன்வைத்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதனால், அப்பிரதேசங்களிலுள்ள வாக்காளர்கள் தமது வாக்குகளை மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கு வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டிருந்தார். இதற்கு மறுப்புத் தெரிவித்து

தேர்தல் பிரச்சாரத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவின் முகம் அவசியமற்றது- துமிந்த பாய்ச்சல்

Posted by - December 23, 2017

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முகம் அவசியமற்றது எனவும், அவ்வாறு அபேட்சகர்கள் அவரின் படத்தை வேட்பாளர்களின் புகைப்படத்துடன் வெளியிடுவதற்கு கட்சி எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லையெனவும் ஸ்ரீ ல.சு.க.யின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அபேட்சகர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்தையும் தமது படத்துடன் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தலாம் என

நல்லாட்சி என்று ஒரு மண்ணும் கிடையாது – நடப்பது இராணுவ ஆட்சியே!

Posted by - December 22, 2017

இங்கே நல்லாட்சி என்று ஒரு மண்ணும் கிடையாது. இங்கே அடக்குமுறை இராணுவ ஆட்சியே நடக்கின்றது என சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளளுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை தமிழர் தாயகத்தில் திணிக்கவே யாழ் மண்ணில் நாக விகாராதிபதியின் உடல் தகனம்!-அனந்தி சசிதரன்

Posted by - December 22, 2017

சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை தமிழர் தாயகத்தில் திணிக்கவே யாழ் மண்ணில் நாக விகாராதிபதியின் உடல் தகனம்! வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்! தமிழின அழிப்பின் தோற்றுவாயாக நீறுபூத்த நெருப்பாக கனன்றுகொண்டிருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தினை தமிழர் தாயகத்தில் திணிக்கும் முயற்சியாகவே, நாக விகாராதிபதியின் உடலை யாழ் மண்ணில் எமது மக்களால் புனித பூமியாக கருதப்படும் இடத்தில் தகனம் செய்ய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐயமேற்படுகிறது. தமிழர் தாயகத்தின் பண்பாட்டுத் தலைநகரமாக விளங்கிவரும்

நாகை மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு.!

Posted by - December 22, 2017

கடந்த மாதங்களில் கடற்படையால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்ட நாகை மாவட்ட 38 மீனவர்களும் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிவான் நளினி கந்தசாமி மீனவர்களை எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 38 மீனவர்களும்  யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில்  இருந்த 160 மீனவர்களில் நேற்று வரை 20 மீனவர்கள் மட்டும்மே விடுதலை செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது

விகாராதிபதியின் உடலை தகனம்செய்ய அதிகாரம் கொடுத்தது யார் ?-சுரேஷ்

Posted by - December 22, 2017

“யாழ்ப்பாணம் – முற்றவெளியில் விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வது தமிழ் மக்களின் உணர்வுகளை மலினப்படுத்தும் ஒரு நடவடிக்கை, இவ்வாறன செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்குகிறது.”   என  தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். சமகால நிலமைகள் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழ் மக்களின் பண்பாட்டில் இறந்த வர்களுக்கான இறுதி கிரியைகள் தகனம் செய்யும்

வவுனியாவில் நூதனமாக பணம் திருட முயன்றவர்கள் மடக்கிப்பிடிப்பு!!!

Posted by - December 22, 2017

வவுனியா –  கூமாங்குள பகுதியில் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் என தங்களை அடையாளப்படுத்தி பணம் பெற முயன்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்மபவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, இன்று மதியம் 2 மணியளவில் வவுனியா – கூமாங்குளம் பகுதியில் வீடுவீடாக சென்ற இருவர் தம்மை பிரபல தனியார் இலத்திரனியல் நிறுவனத்தின் ஊழியர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டு பொருட்கள் மலிவு விலையில் தருவதாக கூறி மக்களிடம் முற்பணம் பெற்று வந்துள்ளனர். குறித்த இருவர் மீதும்  சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அப் பகுதி மக்கள்

பூநகரி பரந்தன் வீதியில் விபத்து : ஒருவர் பலி : ஒருவர் படுகாயம்

Posted by - December 22, 2017

கிளிநொச்சி – பூநகரி பரந்தன் வீதியில் நல்லூர் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதோடு  மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரியிலிருந்து பூநகரி ஊடாக பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், பரந்தன்  பகுதியிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது  மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிசைக்காக யாழ்ப்பாணம்

திடீர் காற்றின் காரணமாக வீடு ஒன்று முழுமையாக சேதம்!!

Posted by - December 22, 2017

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தாழ்வுபாடு கிராமம், அருளப்பர் வீதி பகுதியில் உள்ள குடிசை வீடு ஒன்று இன்று  மதியம் திடீர் என ஏற்பட்ட காற்றின் காரணமாக முழுமையாக சேதமடைந்துள்ளது. தாழ்வுபாடு கிராமம் அருளப்பர் வீதி பகுதியில் உள்ள பீற்றர் அந்தோனி மெராண்டா என்பவருடைய வீடே இவ்வாறு சேதமடைந்துள்ளது. இன்று  காலை கணவர் தொழிலுக்குச் சென்றிருந்த நிலையில் மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் வீட்டில் இருந்த நேரம் குறித்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளது. குறித்த வீட்டில் தாய்