பொலிதீன் பயன்பாட்டுத் தடை தோல்வி

Posted by - December 23, 2017

பொலிதீன் மற்றும் அதனுடன் தொடர்புடைய தயாரிப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் கூறுகிறது. தடை செய்யப்பட்ட பொலிதீன் வகைகள் வேறு விதமாக மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக அந்த மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே கூறினார். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பொலிதீன் வகையை விட அந்த பொலிதீன் வகைகள் மனித உடலுக்கு பாதகமானது என்று அவர் மேலும் கூறினார்.

மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்- ஆறுமுகன் தொண்டமான்

Posted by - December 23, 2017

கடந்த காலங்களில் இழந்த பலத்தை மீண்டும் பெற வேண்டுமானால் 2018ம் ஆண்டு இடம் பெறுகின்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் எமது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார் . 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம் பெறுகின்ற உள்ளூராட்ச்சி சபை தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் இன்று சனிக்கிழழை தேர்தல் பிரசாரத்தின் போது டிக்கோயா, பொகவந்தலாவ, சாமிமலை போன்ற பகுதிகளில் உள்ள தோட்டபுறங்களுக்கு

மொழி உரிமை மீறப்படுகிறது!

Posted by - December 23, 2017

ஸ்ரீலங்கா அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மொழி உரிமை மீறப்பட்டுவருவதாக அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மொழிசார் உதவியாளர்கள் 3 ஆயிரம் பேரை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மாத்தறை கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் சுட்டிக்காட்டினார்.

சாதா­ரண தர பரீட்சை எழு­திய இருவர் பரி­தா­ப­மாக பலி.!

Posted by - December 23, 2017

கொழும்பு, தலங்­கம பிர­தே­சத்தில் விளை­யாட்­டுக்­காக மோட்டார் சைக்கிள் ஓட்­டிய இரு இளை­ஞர்கள் விபத்­தொன்றில் உயி­ரி­ழந்­துள்­ளனர். குறித்த சம்­பவம்  நேற்று முன்­தினம் இரவு இடம்­பெற்­றுள்­ள­தாக தலங்கம பொலிஸார் குறிப்­பிட்­டுள்­ளனர். அக்­கு­ரே­கொ­டையில் இருந்து டென்சில் கொப்­பே­க­டுவ வீதி வரை மோட்டார் சைக்­கிளை ஓட்­டிய இரு­வரும் குறுக்கு வீதி ஒன்றில் மற்­று­மொரு வாக­னத்தை முந்திச் செல்ல முற்­பட்ட போது விபத்து ஏற்­பட்­டுள்­ளது. இதில் இரு­வரும் உயி­ரி­ழந்­துள்­ளனர். 17 வய­தான சென­வி­ரத்ன களுத்­தர லிய­னகே புலான் சஞ்­சய மற்றும் சென­வி­ரத்ன களுத்­தர லிய­னகே

ஊடகவியலாளர்களுக்கு இலவச பயணச் சீட்டு

Posted by - December 23, 2017

சப்ரகமுவ மாகாண ஊடகவியலாளர்களுக்கான 2018 ஆம் ஆண்டுக்கான இலவச பயணச் சீட்டு வழங்கும் நிகழ்வு எதிர்வரும்  27 ஆம் திகதி இரத்தினபுரி சமுர்த்தி மண்டபத்தில் காலை  10 மணிக்கு நடைபெறவுள்ளது. வருடாந்தம் இடம்பெற்று வரும் இந்நிகழ்வு இம் முறை சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேராவின் பணிப் புரைக்கமைய சப்ரகமுவ மாகாண போக்குவரத்து அதிகார சபை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இத்தினம் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து கொண்டு வருமாறு சகல ஊடகவியலாளர்களையும் போக்கு வரத்து அதிகார சபையின்

வரட்சிக்காக வெட்டப்பட்ட குழி ஒன்றரை வயது குழந்தைக்கு எமனானது.!

Posted by - December 23, 2017

கிளிநொச்சி – அக்கராயன்குளம், கண்ணகிபுரம் பகுதியில் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று நீர் நிரம்பிய குழியில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த சத்தியசீலன் ஜெயந்தன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வரட்சி காரணமாக குறித்த வீட்டார் குழாய் கிணற்றில் பொருத்தப்பட்ட மோட்டாரினை தாழ இறக்கி பயன்படுத்துவதற்காக வெட்டப்பட்ட குழியிலேயே குறித்த குழந்தை விழுந்துள்ளது. வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என தெரிவித்து அயலவர்களின் உதவியுடன் தேடிய போது

60 அடி பள்ளத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட நபர் உயிரிழப்பு!!

Posted by - December 23, 2017

டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம – சந்திரிகாமம் வனப்குதியில் விறகு எடுக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தவறி 60 அடி பள்ளத்தில் கீழே விழுந்து படுங்காயம்பட்டு கிடந்த நிலையில், மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர். நேற்று காலை 9 மணியளவில் விறகு எடுக்க செல்வதாக வீட்டில் உறவினர்களிடம் கூறிவிட்டு சென்று மாலையாகியும் வீடு திரும்பாமையினால் அவரது குடும்பத்தினர் டயகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். தொடர்ந்து பொலிஸாரும், குடும்பத்தாரும் ஊர் பொதுமக்களுடன்

பிலிப்பீனின் தீவுப் பகுதியில் சூறாவளி, 74 பேர் பலி

Posted by - December 23, 2017

பிலிப்பீனுக்குச் சொந்தமான மின்தனாவோ தீவைத் தாண்டிச் சென்ற மழையுடன் கூடிய சூறாவளிக் காற்றில் சிக்கி 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதிக மழை வீழ்ச்சியின் காரணமாக மண்சரி நிகழ்வுகளும் பல இடம்பெற்றுள்ளன. டெம்பியன் என அழைக்கப்படும் இந்த சூறாவளி மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடியதாகும் எனவும் கூறப்படுகின்றது.

வேட்பாளர் பட்டியலில் பிரதமர் திடீர் தலையீடு, பெயர்களும் நீக்கம்

Posted by - December 23, 2017

வெளி­நாட்டில் தலை­ம­றை­வா­கி­யுள்­ள பிர­பல பாதாள உல­கக்­கு­ழுவின் தலை­வரின் மகனின் பெயர் ஐ.தே.க.யின் கொழும்பு மாநகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் இருந்து   நீக்­கப்­பட்­டுள்­ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் கொழும்பு மாந­கர சபைக்­கான வேட்­பாளர் பட்­டி­யலில் இணைக்க தயா­ராக இருந்த ஒரு­வரின் பெயரையே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­யிட்டு இவ்வாறு நீக்­கி­யுள்ளார்.

காங்கேசன்துறையிலிருந்து சென்னைக்கு கப்பலில் பயணிக்கலாம்!

Posted by - December 23, 2017

சிதம்­ப­ரத்­தில் நடை­பெ­றும் திரு­வா­திரை உற்­ச­வத்­தில் பங்­கேற்­கும் பக்­தர்­க­ளுக்­காக, காங்­கே­சன்­து­றை­யில் இருந்து சென்­னைக்­குப் பய­ணி­கள் கப்­பல் சேவையை நடத்த இந்­திய மத்திய அரசு அனு­மதி அளித்­துள்ளது.