பிலிப்பீனின் தீவுப் பகுதியில் சூறாவளி, 74 பேர் பலி

248 0

பிலிப்பீனுக்குச் சொந்தமான மின்தனாவோ தீவைத் தாண்டிச் சென்ற மழையுடன் கூடிய சூறாவளிக் காற்றில் சிக்கி 74 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதிக மழை வீழ்ச்சியின் காரணமாக மண்சரி நிகழ்வுகளும் பல இடம்பெற்றுள்ளன.

டெம்பியன் என அழைக்கப்படும் இந்த சூறாவளி மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடியதாகும் எனவும் கூறப்படுகின்றது.

Leave a comment