மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாட்டம்

Posted by - November 12, 2017

யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் புகையிரத நிலையத்தினரின் அசமந்தப்போக்கினால் குடாநாட்டில் பொழியும் மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாடுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. யாழ்ப்பாணம் புகையிரதப் பாதையில் நாவற்குழிப் பகுதியில்  புகையிரத பாதையில் இருந்த பழைய பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் பொருத்தும் பணிகள் ஒக்டோபர் மாதம் 23ம் திகதிமுதல் ஒரு வாரமாக இடம்பெற்று தொடரூந்துப் பாதை சீரமைக்கப்பட்டு தொடரூந்து சேவைகள் இடம்பெறுகின்றன. இருப்பினும் குறித்த பகுதியில் இருந்த பழைய பாலம் அகற்றப்படவில்லை இதன் காரணத்தினால் நாவற்குழிப் பகுதியில் உள்ள

மக்களின் வாழ்வாதாரப் பயிர்களை அழித்து நாசம் செய்த யானைக் கூட்டம்!

Posted by - November 12, 2017

வவுனியா மாவட்டம் நெடுங்கேணி மக்கள் வாழ்விடப்  பகுதிக்குள் நேற்று அதிகாலை புகுந்த யானைக் கூட்டம் அப் பகுதி மக்களின் வாழ்வாதாரப் பயிர்களை அழித்து நாசம் செய்தமைநினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்படைந்துள்ளது. நெடுங்கேணியின் ஓடைவெளிக் கிராமத்தின்  மக்கள் வாழ்விடப்பகுதிக்குள் அதிகாலையில் புகுந்த யாணைகள் மக்களின் வாழ்வாதாரத் தொழிலான பப்பாசிச் செய்கையினை அழித்துள்ளது. இதன் காரணமாக சுமார் 360ற்கும் மேற்பட்ட பப்பாசி மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 3 விவசாயிகளிற்கு சொந்தமான நிலப்பில் இருந்த பெருந்தொகைப் பப்பாசி மரங்களில் இருந்தே இவ்வாறு

தமிழர்களை இராணுவம் கொடுமைப் படுத்தியது-சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - November 12, 2017

வடக்கில் தமிழர்கள் சிலர் மீது  இராணுவத்தினரால் மீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சரவதேச ஊடகமான அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இதனை உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம்  தாம் முன்னர் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும், துரதிஷ்டவசமாக, அது கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றும் அவர கூறியுள்ளார். சர்வதேசப் பொறிமுறை

லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்- எல்லே குணவங்ச தேரர்

Posted by - November 12, 2017

அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்ற முயற்சித்தால்  லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். மாத்தறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். புதிதாக கொண்டுவரப்படவுள்ள அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்துவது தடுத்து நிறுத்தப்படுவது மட்டுமல்லாது, அது எரித்து நாசமாக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். காணி உரிமை வழங்கப்பட்டால் திருகோணமலை துறைமுகம் உள்ளிட்ட கடல் மற்றும் நில வளங்களை இலங்கை இழக்கும் என

இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

Posted by - November 12, 2017

மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் இன்றைய தினம் மழை பொழிய கூடும் என அத்திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

படையினருக்கு அழுத்தங்கள் ஏற்படும் வகையில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை-மைத்ரிபால சிறிசேன

Posted by - November 12, 2017

தேசிய பாதுகாப்பு பலவீனப்படும் வகையிலோ அல்லது பாதுகாப்பு படையினருக்கு அழுத்தங்கள் ஏற்படும் வகையில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாராஹேன்பிட்டவில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். தற்போது படையினரின் நடவடிக்கைகளுக்கு பயன்படாத காணிகளை வடக்கு கிழக்கு மக்களுக்கு மீண்டும் விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்காலத்தில் அத்தகைய காணிகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். படைவீரர்களுக்கு எதிராக எந்தவகையான விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை என்பதுடன்,

களுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள 13 தோட்ட வைத்­தி­ய­சா­லைகள் அர­சினால் பொறுப்­பேற்­கப்­படும்

Posted by - November 12, 2017

பெருந்­தோட்ட வைத்­தி­ய­சா­லை­களை அர­சாங்கம் பொறுப்­பேற்­க­வுள்ள திட்­டத்தின் கீழ், களுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள 13 தோட்ட வைத்­தி­ய­சா­லைகள் அர­சாங்­கத்­தினால் பொறுப்­பேற்­கப்­பட்டு, அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக சுகா­தார அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­துள்ளார். தோட்ட வைத்­தி­ய­சா­லை­களை அபி­வி­ருத்தி செய்­வதன் மூலம் பெரி­யாஸ்­பத்­திரி, போதனா வைத்­தி­ய­சாலை, ஆதார வைத்­தி­ய­சாலை மற்றும் பிராந்­திய வைத்­தி­ய­சா­லை­களில் ஏற்­படும் நெருக்­க­டி­களைக் குறைக்க முடியும். அத்­துடன்,  பெரும் சிர­மத்­துக்கு மத்­தியில் நீண்ட தூரம் சென்று சிகிச்சை பெறும் தோட்டத் தொழி­லா­ளர்­களும் சிர­ம­மின்றி இல­கு­வாக சிகிச்சை பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்பைப் பெறுவர்.

கைத்­தொ­லை­பேசி கட்­டணம் அதி­க­ரிக்குமா.?

Posted by - November 12, 2017

வரவு, செலவுத் திட்ட  ஆலோ­ச­னை­க­ளின்­படி தொலை­பேசி  கோபு­ரங்­க­ளுக்­காக அற­வி­டப்­படும் வரி அதி­க­ரிக்­கப்­பட்­டதால் கைத்­தொ­லை­பேசி கட்­ட­ணங்­களும் அதி­க­ரிக்­கு­மென தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. தொலை­பேசி கோபு­ரங்­க­ளுக்­காக மாதாந்தம் இரண்டு லட்ச ரூபா வீதம்  அற­வி­டு­வ­தற்கு முன் வைக்­கப்­பட்ட ஆலோ­ச­னை­க­ளின்­படி சம்­பந்­தப்­பட்ட கைத்­தொ­லை­பேசி நிறு­வ­னங்கள் இந்த வரியை பாவ­னை­யா­ளர்கள் மீதே சுமத்தும் எனவும் , இதனால் கைத்­தொ­லை­பேசி கட்­ட­ணங்கள் அதி­க­ரிக்கும் எனவும் தெரி­ய­வ­ரு­கின்­றது. கைத்­தொ­லை­பேசி நிறு­வ­னங்கள் நாடு முழு­வதும் 11922 தொலை­பேசி கோபு­ரங்­களை நிர்­மா­ணித்­துள்­ளன. இதன்­படி இக் கோபு­ரங்­க­ளுக்­காக மாதாந்தம் 223கோடியே 84 இலட்சம்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிராக புதிய விசாரணை

Posted by - November 12, 2017

இலங்கை இராணுவம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அதிகாரி யஸ்மின் சூகா முன்வைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் செய்த் ராத் ஹுசைன் இலங்கை தொடர்பில் புதிய விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலரின் வாக்கு மூலத்தின் படி தமிழர்கள் 60 பேர் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக யஸ்மின் ஐ.நா.வில் முறைப்பாடு செய்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இந்த சித்திரவதை இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்து கடந்த 8 வருடங்களின் பின்னர் முன்வைக்கப்பட்டுள்ள

ஸ்ரீ ல.சு.க.- கூட்டு எதிர்க் கட்சி இணைவு தொடர்பில் திருப்பம் ! 2 வாரத்தில் தீர்மானம்

Posted by - November 12, 2017

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் மிக்க செயற்குழுக் கூட்டமொன்று அடுத்துவரும் இரு வாரங்களில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த 03 ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் ஸ்ரீ ல.சு.க.யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்கு, கூட்டு எதிர்க் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கூட்டு எதிர்க் கட்சியின் எவரும் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கூட்டு எதிர்க் கட்சி நிபந்தனையிட்டு சுதந்திரக் கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாம்