மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பாடசாலைகளில் பெறுபேறுகளை உயர்த்துவதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்- தர்தலிங்கம் சித்தார்த்தன்(காணொளி)

Posted by - January 5, 2017

யாழ்ப்பாணம் நீர்வேலி கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் வேலுப்பிள்ளை மண்டப திறப்பு விழாவும், பரிசில் தின நிகழ்வும் இன்று நடைபெற்றது. பாடசாலையின் முதல்வர் தி.இரவீந்திரநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விருந்தினர்கள் ஆலயத்திலிருந்து அழைத்து வரப்பட்டு, பாடசாலையின் மறைந்த முன்னாள் அதிபர் வேலுப்பிள்ளையின் ஞாபகார்த்த மண்டபம் பாராளுமன்ற உறுப்பினர் தர்தலிங்கம் சித்தார்த்தன், பாடசாலையின் அதிபர், கோப்பாய் கோட்டக்கல்வி அதிகாரி ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து விருந்தினர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டு, ஆசியுரை இடம்பெற்றது ஆசியுரையினை நீர்வேலி செல்வக்கதிர்காம

சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Posted by - January 5, 2017

நாட்டிற்குள் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரி ஏய்ப்புச் செய்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் ஒருதொகை சிகரெட்டுக்களுடன் மினுவன்கொட பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர் வசம் இருந்து 1500 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக மினுவன்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

மாலைதீவு கடற்படையினரால் இரு மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்

Posted by - January 5, 2017

கிழக்கு மாகாணத்தில் இரண்டு இயந்திர படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்று காணாமல்போன கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களுள் இருவர் கிழக்கு மாகாணத்தில்  இரண்டு இயந்திர படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்று காணாமல்போன கல்முனையை சேர்ந்த ஆறு மீனவர்களுள் இருவர், படகு ஒன்றுடன் மாலைதீவு கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். மாலைதீவு துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் இருவரும் தமது குடும்பத்தினருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு இன்று இத்தகவலை தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி ஒலுவில்

அங்கோடை – களனிமுல்லை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Posted by - January 5, 2017

அங்கோடை – களனிமுல்லை பகுதியில் பாதாள உலகக் குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் களனிமுல்லையில் இருந்து அங்கோடை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக தெரியவந்துள்ளது. இவர் பயணித்த திசைக்கு எதிர்த்திசையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு ஆயுததாரிகளே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தில் 36 வயதுடைய சுரங்க குமார என்பவரே

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மரண தண்டனை கைதி பட்டதாரியாகியுள்ளார்

Posted by - January 5, 2017

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் பட்டதாரியாகியுள்ளார். பம்பலபிட்டி வர்த்தகரான மொஹமட் சியாம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் உப பொலிஸ் பரிசோதகரான பீ.ஏ.லக்மினி இந்திக பமுணுசிங்கவே இவ்வாறு பட்டதாரியாகியுள்ளார் ஸ்ரீஜயவர்தன பல்கலைக்கழகத்தில் அவர் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்துக்கொண்டுள்ளார்.  சிறைச்சாலையிலிருந்து கல்வி பயின்று பட்டப்படிப்பு பரீட்சைக்கு தோற்றிய அவர், இன்று தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தமைக்கான சான்றிதழை பெற்றுக் கொண்டுள்ளார்.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில்  அமைகிறது  பொதுக்கல்லறை (காணொளி)

Posted by - January 5, 2017

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லினை   இன்று   பன்னிரண்டு  முப்பது   மணியளவில்  மாவீரர்களின்   உறவினர்கள் ,முன்னாள்  போராளிகள் இணைந்து  நாட்டியிருந்தனார் யுத்த நிறைவிற்கு பின்னர்   உடைக்கப் பட்டிருந்த   குறித்த துயிலும் இல்லமானது பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக் கல்லறை அமைக்கும் பணி இன்று    உத்தியோக  பூர்வமாக  ஆரம்பித்து  வைக்கப்பட்டுள்ளது அத்துடன்  படையினர் வசமிருந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், கடந்த  வருட இறுதியில்  அரசாங்கத்தால்

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் ஆசிரிய மத்திய நிலையம் (காணொளி)

Posted by - January 5, 2017

கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் 28.05 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள ஆசிரிய மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. மத்திய அரசின் நிதியுதவியுடன் மாகாணக் கல்வி அமைச்சினால் கிளிநொச்சி கல்வி வலயத்திற்கான ஆசிரிய மத்திய நிலையம் 28.05 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பகல் 12. 05மணிக்கு நடைபெற்றுள்ளது. இதில் முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக

பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு

Posted by - January 5, 2017

பாடசாலை மாணவ, மாணவியரின் போஷாக்கினை மேம்படுத்துவதற்காக 5,185 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனைக் கொண்டு பகல் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார்

Posted by - January 5, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டார். அது கைகூடவில்லை. அதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினரானார் (எம்.பி). அரசாங்கத்தின் அபிவிருத்தி வேகத்தினால், அவர் தனது எம்.பி பதவியையே தக்கவைத்துக் கொள்வதற்குப் போராட்டம் நடத்துகின்றார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கடும் கோபமும் சாபமும்

Posted by - January 5, 2017

அரசாங்கத்துடனே தனக்கு கோபம் உள்ளது. மற்றபடி சர்வதேச சமூகத்துடனோ அல்லது சீனாவுடனோ எந்தவித கோபமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.