காசோலையை ஆதரமாக வைத்து வழங்கிய கட்டளை சட்டரீதியற்றது

Posted by - November 15, 2017

காசோலைகளை ஆதாரமாகவைத்து பணத்தை மீள வழங்குமாறு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன். “குற்றவாளியாக இனங்காணப்பட்டவர் வழக்காளிக்கு வழங்கவேண்டிய 47 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பணத்தை செலுத்தும்படி நீதிவான் கட்டளை வழங்கியுள்ளார். அந்தக் கட்டளையானது சட்டரீதியான கட்டளை இல்லை. அந்தக் கட்டளையை இந்த மன்று தள்ளுபடி செய்கிறது.  மாறாக எதிரிக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. இந்தத் தண்டனை நீதிவான்

வடக்கு தபால் ஊழியர்களுக்கு 583 புதிய சைக்கிள்கள்

Posted by - November 15, 2017

வடக்கு மாகாணத்தில் உள்ள தபால் விநியோக ஊழியர்களுக்கு புதிய சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கென 583 சைக்கிள்களை தபால் தொலைத்தொடர்புகள் அமைச்சு வடக்குக்கு அனுப்பி வைத்துள்ளது. ஐந்து மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட சைக்கிள்களை தனித்தனியே அனுப்பி வைக்கவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துக்கு 269, கிளிநொச்சி 94, வவுனியா 83, மன்னார் 80, முல்லைத்தீவு 57, என ஒதுக்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 269 சைக்கிள்களும் நேற்று அதிகாலை கனரக வாகனம் மூலம் கொண்டுவரப்பட்டன. இந்த சைக்கிள்கள் யாழ்.பிரதம தபாலகத்தால் மாவட்டத்தில் உள்ள

முல்லைத்தீவு வெலிஓயா பகுதியில் ஜெனி மிதிவெடிகள் மீட்பு

Posted by - November 15, 2017

முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு என்று அழைக்கப்படும் வெலிஓயா பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளால்  புதைத்துவைக்கப்பட்ட ஜெனி மிதிவெடிகள் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் மிதிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இரகசிய பொலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குறித்த பகுதிக்கு 14.11.2017 இன்று மாலை 5.00 மணியளவில் சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த பகுதியினை தோண்டியுள்ளார்கள் இதன்போது 41 ஜெனீ மதி வெடிகளும் அதற்கான வெடிப்பிகள் 19 ஆகியன

யாழ்ப்பாணத்தில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல்

Posted by - November 15, 2017

யாழ்ப்பாணத்தில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல்  2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம் யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு  7 மணியளவிலிருந்து 8.45 மணிக்குள் 4 இடங்களில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம் புரிந்துள்ளது. மானிப்பாய் – சங்குவேலியில் நேற்றிரவு 7 மணியளவில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கிருந்த 4 பேரை வெட்டிக் காயப்படுத்தியது. வீட்டிலிருந்த பொருள்களையும் அடித்து நாசப்படுத்திவிட்டு அந்தக் கும்பல் தப்பித்தது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் மானிப்பாய் குச்சி ஓடையைச் சேர்ந்த ஆனந்தராசா

நடுவீதியில் மாணவரின் ஆடையைக் களைந்த பொலிஸ் அதிகாரி

Posted by - November 15, 2017

நடுவீதியில் மாணவர் ஒருவரின் ஆடையைக் களைந்த பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரியவருகிறது. சிலாபத்தில் கடந்த சனிக்கிழமை தேடுதல் நடவடிக்கை ஒன்று நடத்தப்பட்டது. அதன்போது, சாரம் அணிந்த பதினாறு வயது மாணவர் ஒருவரின் சாரத்தை பொலிஸ் அதிகாரியொருவர் பிடித்திழுத்திருக்கிறார். இதனால் அந்த மாணவர் பொதுமக்கள் முன்னிலையில் அவமானப்பட நேர்ந்திருக்கிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் அந்த மாணவர், கடந்த மூன்று தினங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதாகவும், சாதாரண தரப் பரீட்சை எழுதப் போவதில்லை

காமினி செனரத் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - November 15, 2017

முன்னாள் ஜனாதிபதியின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 13ம் திகதி குறித்த நபர்கள் சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இதேவேளை குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் சந்தேக நபர்களை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை காப்புறுதி திணைக்களத்திற்கு சொந்தமான 4 பில்லியன் ரூபா பணத்தினை முறையற்ற

சிம்பாபே அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இராணுவத்தினர் வசம்

Posted by - November 15, 2017

சிம்பாபே நாட்டின் அரச ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை, அந்த நாட்டு இராணுவத்தினர் வசப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, குற்றவாளிகளை இலக்கு வைத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இராணுவத்தினர் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. அரசாங்கத்தை இராணுவத்தினர் கைப்பற்றவில்லை எனவும், ஜனாதிபதி ரொபட் முகாபே பாதுகாப்பாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், விரைவில் தமது இலக்கை நிறைவேற்றுவதோடு, நிலமையை வழமைக்குக் கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாகவும், இராணுவத்தினரால் வாசிக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

ஜனவரி முதல் அரச பணியாளர்கள் ஊதியம் அதிகரிக்கப்படும் – வஜிர அபேவர்தன

Posted by - November 15, 2017

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் ஊதியம் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அலுவலக உதவியாளரில் தொடக்கம் சட்டமா அதிபர் வரையில் அனைத்து அரச பணியாளர்களுக்கும் இந்த ஊதிய அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அலுவலக உதவியாளரின் அடிப்படை ஊதியம் 14ஆயிரம் ரூபாயில் இருந்து 23 ஆயிரம் ரூபாவாகவும்இ சட்டமா அதிபரது ஊதியம் ஒரு லட்சத்து 10 ஆயிரம்

கடுபொத வாகன விபத்தில் 12 பேர் காயம்

Posted by - November 15, 2017

கடுபொத, கடஹபொல பிரதேசத்தில் கெப் வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கெப் வானத்தில் பயணித்த 7 பெண்கள் , மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண்களும் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் சிக்கிய 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடுபொத பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் ஒன்பது பேர் மேலதிக சிகிச்சைக்களுக்காக குருணாகலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கெப் வாகனத்தை செலுத்திய சாரதிக்கு வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இளம் கோடீஸ்வர வர்த்தகர் தற்கொலை

Posted by - November 15, 2017

அத்துருகிரிய, கஹன்தொட்ட, அலுபோவத்த பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். அதில், கடன் சுமை தாங்க முடியாமல் தான் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட நபர்  அத்துருகிரியவில் குழந்தைகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்திவந்தவர் என்றும் 38 வயதாகும் இவருக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.