முல்லைத்தீவு வெலிஓயா பகுதியில் ஜெனி மிதிவெடிகள் மீட்பு

307 0
முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு என்று அழைக்கப்படும் வெலிஓயா பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளால்  புதைத்துவைக்கப்பட்ட ஜெனி மிதிவெடிகள் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் மிதிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இரகசிய பொலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குறித்த பகுதிக்கு 14.11.2017 இன்று மாலை 5.00 மணியளவில் சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் குறித்த பகுதியினை தோண்டியுள்ளார்கள் இதன்போது 41 ஜெனீ மதி வெடிகளும் அதற்கான வெடிப்பிகள் 19 ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment