காமினி செனரத் தொடர்ந்தும் விளக்கமறியலில்

284 0

முன்னாள் ஜனாதிபதியின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 13ம் திகதி குறித்த நபர்கள் சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் சந்தேக நபர்களை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை காப்புறுதி திணைக்களத்திற்கு சொந்தமான 4 பில்லியன் ரூபா பணத்தினை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் காமினி செனரத் மற்றும் குறித்த திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர்களான பியதாச குடாபாலகே, நீல் ஹபுஹின்ன ஆகியோருக்கெதிராக வழக்கு தொடரப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment