ஜெயலலிதா தொடர்ந்து எதிர்த்து வந்த உதய் திட்டத்தில் தமிழகம்

Posted by - January 10, 2017

மத்திய அரசின் ‘உதய்’ மின் திட்டத்தில் சேருவதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு எந்த நிபந்தனையும் இல்லாமல் உதய் மின் திட்டத்தில் இணைந்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி முன்னிலையில்  அதிகாரிகள் டெல்லி சென்று கையெழுத்திட்டனர். நாடு முழுவதும் உதய் (யுடிஏஒய்) மின்திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். இந்தியாவில்

பொது விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கம்

Posted by - January 10, 2017

பொங்கல் திருநாளை கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியிருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. பொங்கல் விடுமுறையை பொது விடுமுறை பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட விரும்புபவர்கள் விருப்பத்தின் பேரில் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு நடக்கும் நம்பிக்கை உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - January 10, 2017

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

சென்னை ஐகோர்ட்டில் இருந்து மாற்றப்பட்ட விவகாரம்

Posted by - January 10, 2017

சென்னை ஐகோர்ட்டில் இருந்து மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதிபதி கர்ணன் தானே ஆஜராகி வாதாட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

“தாதாக்கள்” இருப்பது கொழும்பில் அல்ல, ஹம்பாந்தோட்டையில் தான் – ரவி கருணாநாயக்க

Posted by - January 10, 2017

“தாதாக்கள்” இருப்பது கொழும்பில் அல்ல, ஹம்பாந்தோட்டையில் தான் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பதற்ற நிலைமைக்கு கொழும்பிலிருந்து அடியாட்கள் அழைத்து வரப்பட்டமையே காரணம் என கூட்டு எதிர்க் கட்சியினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கையில் அமைச்சர்  இதனைக் கூறியுள்ளார். தான் உட்பட பலர் கடந்த காலத்தில் ஹம்பாந்தோட்டைக்கு சென்ற போது எம்மீது குழுவொன்று தாக்குதல் நடாத்தியது. இதன்படி பார்த்தால், கூட்டு எதிர்க் கட்சி கூறுவது போல,

ஹம்பாந்தோட்டையில் பக்கச்சார்பான அடக்குமுறை- ஜீ.எல்.பீரிஸ்

Posted by - January 10, 2017

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பதற்ற நிலைமையின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் செயற்பட்ட விதம் பக்கச்சார்பானது எனவும் இதற்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கேகாலைப் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

போதைப் பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு தண்டப் பணம் 50 ஆயிரம் ரூபா

Posted by - January 10, 2017

போதைப் பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்துக்கு யோசனை முன்வைத்துள்ளது. மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிக்கு 25 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்படுவதாயின் போதைப் பொருள் பாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிக்கு 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறிவிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிற்போடப்பட்டு வருவது ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல்- மஹிந்த தேசப்பிரிய

Posted by - January 10, 2017

உள்ளுராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டு வருவது ஜனநாயகத்துக்கு பாரிய அச்சுறுத்தல் ஆகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மிக விரைவாக தேர்தலை நடாத்தி மக்களின் வாக்குரிமை உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை அவர் கூறியுள்ளார். தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பிலான அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இது மாற்றப்பட்டு பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நேரத்திலும் தேர்தலை

வவுனியா கோவில்குஞ்சிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறுகோரி,ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - January 9, 2017

வவுனியா கோவில்குஞ்சிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யுமாறுகோரி, அப் பாடசாலையின் மாணவர்கள் மற்றும்  பெற்றோருடன் கிராமத்தவர்களும் இணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்குஞ்சிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் நிர்வாகத்திறனற்ற அதிபரை மாற்றவேண்டும், குறித்த பாடசாலைக்கு போதியளவு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பௌதீக வளங்கள் பாடசாலைக்கு வழங்கப்பட வேண்டும்  போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, பாடசாலை வாயிலை மறித்து இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கோவில்குஞ்சிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில்

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளே அரசாங்கத்தை கவிழ்த்துவிடும்- சோசலிஸ மக்கள் முன்னணி

Posted by - January 9, 2017

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளே அரசாங்கத்தை கவிழ்த்துவிடும் என்று சோசலிஸ மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடும் மக்கள் எதிர்ப்பலைகளை மாத்திரமே உருவாக்குவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, இந்த எதிர்ப்பலைகளே அரசாங்கத்தைக் கவிழ்த்துப்போடும் என்றும் கூறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் சோசலிஸ மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது.