யாழ்.குடாநாடு நீரில் மூழ்கும் அபாயம்

Posted by - November 15, 2017

வட பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ். குடாநாடு நீரில் மூழ்கும் ஆபத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு யாழ். குடாநாட்டில் தொடர்ந்து அடை மழை பெய்தால் வெள்ள அபாயம் ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் ஏற்படக் கூடிய பிரதேசத்திலுள்ள மக்கள் வெளியேற நேரிடுமென நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவித்துள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். நெருக்கடிக்குத்

யாழ். மாவட்டத்தில் 402 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ள 468,476 வாக்காளர்கள்

Posted by - November 15, 2017

ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும் 402 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ். மாநகர சபை பருத்தித்துறை வல்வெட்டித்துறை சாவகச்சேரி என மூன்று நகர சபைகள் மற்றும்இ 13 பிரதேச சபைகளுக்கும் மொத்தம் 402 உறுப்பினர்கள் இம்முறை தெரிவு செய்யப்படவுள்ளனர். இவர்களில் 243 உறுப்பினர்கள் வட்டார முறையில் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படுவர். ஏனையஇ 159 உறுப்பினர்கள் விகிதாசார முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்த தேர்தலில்இ வாக்களிப்பதற்கு 468,476 வாக்காளர்கள் யாழ். மாவட்டத்தில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லும் பாதை சரியானதா- இல்லையா ? மக்களின் தீர்ப்பு முடிவு செய்யும்-சுமந்திரன்

Posted by - November 15, 2017

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்லும் பாதை சரியானதா- இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வவதற்கான வாய்ப்பாக உள்ளூராட்சித் தேர்தல் அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எவ் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் அமைப்புகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்துஇ கொழும்பு ஊடகம் ஒன்றின் கேள்விக்குப் பதிலளித்துள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், “ஈபிஆர்எல்எவ் இன்னமும் கூட்டமைப்பை

தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்வனவு; மின்சார சபைக்கு 8 பில்லியன் நஷ்டம்

Posted by - November 15, 2017

‘வெஸ்ட் கொஸ்ட்’ தனியார் மின்சார உற்பத்தி நிலையத்திடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதால் அரசாங்கத்திற்கு 8 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு தூதரை நியமித்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

Posted by - November 15, 2017

ஏவுகணை மற்றும் அணுகுண்டு சோதனைகளை நடத்தி வரும் வடகொரியாவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் சார்பில் மூத்த அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

திடீரென வற்றிப் போன கிணறுகள்!! சுனாமி பீதியால் பதறியடித்து ஓடிய பொதுமக்கள்!! கிழக்கில் பதற்றம்!!

Posted by - November 15, 2017

கிழக்கு மாகாணத்திலுள்ள பல கிணறுகள் திடீரென வற்றிப் போனமையினால் மக்கள் பெரும் பீதியடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுனாமி அனர்த்தம் ஏற்படவுள்ளதாக அஞ்சிய மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் பகுதியிலும், அம்பாறை மாவட்டம் கல்முனை, பாண்டிருப்பு பகுதியிலும் கிணறுகள் திடீரென வற்றுத் தொடங்கியுள்ளன.இந்தத் தகவல் பரவத் தொடங்கியதும், பல இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.எனினும் கிழக்கு மாகாணத்தில் சுனாமி ஆபத்து இல்லை, என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இது

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டர் பதவியேற்பு

Posted by - November 15, 2017

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டர் (62) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் பென்ஸ் ட்விட்டரில், “ஜஸ்டருக்கு வாழ்த்துகள். அமெரிக்கா இந்தியா இடையிலான உறவு வலுவாக உள்ளது. இந்த உறவை ஜஸ்டர் மேலும் மேலும் வலுப்படுத்துவார். இதனால் இரு நாடுகளும் பயனடையும் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகளும் முதுநிலை ஆலோசகருமான இவாங்கா ட்ரம்ப் தலைமையிலான குழுவினர்,

சிரியாவில் 61 பேர் பலி

Posted by - November 15, 2017

சிரியாவின் அட்டாரெப் நகரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 61 பேர் பலியாகி உள்ளனர். சிரியா நாட்டில் ஷியா பிரிவை சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ள அட்டாரெப் நகரம் மீது நேற்று முன்தினம் போர் விமானங்கள் வெடிகுண்டுகளை வீசின. இதில் 61 பேர் பலியாகினர். வெடிகுண்டுகளை வீசியது சிரியா விமானப்படையா அல்லது அவர்களுக்கு ஆதரவாக