யாழ்.குடாநாடு நீரில் மூழ்கும் அபாயம்

55156 0

வட பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ். குடாநாடு நீரில் மூழ்கும் ஆபத்துக்கு முகம் கொடுத்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு யாழ். குடாநாட்டில் தொடர்ந்து அடை மழை பெய்தால் வெள்ள அபாயம் ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அனர்த்தம் ஏற்படக் கூடிய பிரதேசத்திலுள்ள மக்கள் வெளியேற நேரிடுமென நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவித்துள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நெருக்கடிக்குத் தேவையான பாதுகாப்பு பிரிவுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையிலான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

அதிக மழை மேலும் தொடர்ந்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புவதற்கான இடம் தொடர்பில் கடற்படை மற்றும் விமானப் படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களில் நேற்று முன்தினம் மழை பெய்துள்ள நிலையில் மானிப்பாய் வீதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் போக்குவரத்துகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் யாழின் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மழையினால் பாதிக்கப்படும் மக்கள் இடம்பெயர்ந்தால் அவர்களை பாதுகாப்பதற்கான இடம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு பிரதேச செயலாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகளுக்கு அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக வட பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment