ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும் – ஜனாதிபதியிடம் அன்புமணி ராமதாஸ் மனு

Posted by - January 22, 2017

பா.ம.க. இளைஞர் அணித்தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், மாணவர்கள் நடத்திவரும் போராட்டம் குறித்தும் விரிவாக கூறினார். பின்னர், ஜல்லிக்கட்டு பிரச்சினை தொடர்பாக மனு ஒன்றையும் ஜனாதிபதியிடம் அன்புமணி ராமதாஸ் வழங்கினார். ஜல்லிக்கட்டு போட்டி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு

டிரம்புக்கு எதிராக போராட்டம் – வன்முறையில் 6 காவல்துறையினர் காயம்

Posted by - January 22, 2017

அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்புக்கு எதிராக வாஷிங்டனில் நேற்று போராட்டம் நடந்தது. டிரம்புக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பியவர்கள் பதவி ஏற்பு விழாவுக்கு வந்த கூட்டத்தினரை கலைக்க முயன்றனர். இதனால் போராட்டம் கலவரமாக மாறியது. சிலர் கைகளில் மரத்தடிகள், ஆக்கி மட்டைகள் மற்றும் கற்களை வைத்திருந்தனர். அவற்றால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் கார்கள் மீது கற்களை வீசியும், தடியால் அடித்தும் தாக்குதல் நடத்தினார்கள். காவல்துறையினர்மீதும் கற்களை வீசியும் தாக்கினார்கள். இதனால் பதட்டமும் பரபரப்பும்

ஜெனிவாவில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கும் பிரேரணை!

Posted by - January 22, 2017

மனித உரிமை விவகாரத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தவும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முறைமையை பரந்துபட்ட ரீதியில் முன்னெடுக்கவும் இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்கும் வகையில் ஐ.நா மனித உரிமை பேரவையில் மற்றுமொரு பிரேரணை கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழா

Posted by - January 22, 2017

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத் திறப்பு விழாவை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. உடல்நல குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி  முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தார். அவரது உருவப்படத்தை தமிழக சட்டசபையில் திறந்துவைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக தனி விழாவை பிரமாண்டமான அளவில் நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த விழாவை நடத்தும் இடம், நாள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தமிழக சட்டசபையில் ஏற்கனவே

பாகிஸ்தான்: மார்க்கெட் பகுதியில் இன்று குண்டு வெடிப்பில் சிக்கி 20 பேர் பலி

Posted by - January 22, 2017

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள பிரபல மார்க்கெட் பகுதியில் இன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கிய 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிரியாவில் அமெரிக்க குண்டு வீச்சில் 100 தீவிரவாதிகள் பலி

Posted by - January 22, 2017

சிரியாவில் அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில் 100 அல்கொய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் பயிற்சி முகாம்களும் அழிக்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு களம் – மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிப்பு

Posted by - January 22, 2017

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி சென்னை மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது. தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஆனால், மத்திய அரசு கைவிரித்து விட்டது. இதையடுத்து அரசை நம்பி எந்த வித பிரயோஜனமும் இல்லை, நாமே களத்தில் இறங்கலாம் என்று இளைஞர்களும், மாணவர்களும் முடிவு செய்தனர். சமூக வலைத்தளம் மூலம் போராட்ட

3 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை – மேற்கு வங்காள கோர்ட்டு தீர்ப்பு

Posted by - January 22, 2017

தேச விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக பாகிஸ்தானை சேர்ந்த இருவர் உள்பட 3 தீவிரவாதிகளுக்கு மேற்கு வங்காள கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.