தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழா

198 0

201701220432436639_Jayalalithaa-photo-in-Tamil-Nadu-Assembly-opening-ceremony_SECVPFதமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத் திறப்பு விழாவை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

உடல்நல குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி  முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தார்.

அவரது உருவப்படத்தை தமிழக சட்டசபையில் திறந்துவைப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

இதற்காக தனி விழாவை பிரமாண்டமான அளவில் நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த விழாவை நடத்தும் இடம், நாள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தமிழக சட்டசபையில் ஏற்கனவே மகாத்மா காந்தி உள்பட பல பிரமுகர்களின் படங்கள் வைக்கப்பட்டு உள்ளன.

அவை அனைத்தும் வரைபடங்களாகும். அதுபோல ஜெயலலிதாவின் படமும் வரையப்படும் என்றும், கவின் கலைக்கல்லூரி மூலம் அவரது படத்தை வரைய நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அவரது படத்தை திறந்துவைப்பதற்கு முக்கிய பிரமுகர் யாரை அழைக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.