இன, சமய பேதங்களைத் தாண்டிய மனித நேயமிக்க அமைதியான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையை உருவாக்க சவால்களை வெற்றிகொள்ள தயாராகுவோம்- பிரதமர் ரணில்

Posted by - February 4, 2017

சவால்களை வெற்றிகொள்ள துணிச்சலுடனும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட இந்த சுதந்திர தினத்தில் விசேடமாக உறுதி பூணுவோம்  என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். மிகவும் மோசமான ஓர் ஆட்சிக் காலத்தைத் தோற்கடித்து நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியான நிலைமையில், காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்டு தான் சுதந்திரத்தின் 69 ஆவது வருடப் பூர்த்தியைக் கொண்டாடுகின்றமை தனிச்சிறப்பு மிக்க சந்தர்ப்பம் என நான் நினைக்கிறேன்

அனைத்து இனங்களும் சமாதானத்துடன் வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு எமது தோள் மீது சுமத்தப்பட்டுள்ளது-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Posted by - February 4, 2017

வரலாற்றில் நாம் அடைந்த ஜனநாயக சுதந்திரத்தைப் பாதுகாத்து, தேசிய சிந்தனையின் ஊடாக அனைத்து இனங்களும் சமாதானத்துடன் வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு எமது தோள் மீது சுமத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 69 ஆவது சுதந்திர தினத்தையிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஜனநாயகம் சுதந்திரம் போன்ற வார்த்தைகளைக் கொண்டு வர்ணிக்கப்பட்ட இருண்ட யுகத்திலிருந்து நாம் விடுதலை பெற்றுள்ளோம் எனவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு ஒரு கொள்கையில்லை

Posted by - February 3, 2017

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பெயரை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிரான வேலைத்திட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

கொழும்பை தூய்மையான நகராக்கியது கோட்டாபய

Posted by - February 3, 2017

கொழும்பு நகரத்தை முறையாக தூய்மையான நகராக்குவதற்கு முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலிம்ப பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

Posted by - February 3, 2017

பாணந்துறை – இரத்தினபுரி வீதியில் ஹொரண, இலிம்ப பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மக்களின் நம்பிக்கையை சிதைக்க இடமளிக்க போவதில்லையாம் -மைத்திரி

Posted by - February 3, 2017

புதிய அரசாங்கத்தை தெரிவு செய்து நாட்டு மக்கள் வைத்த நம்பிக்கையை சிதைக்க எந்த வகையிலும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை -முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்

Posted by - February 3, 2017

வடக்கில் 80 வருடங்களுக்கு மேலாக வாழும் சிங்கள மக்களுடன் எவ்வித பிரச்சினைகளும் இல்லை எனவும் தெற்கில் இருந்து அழைத்து வரப்பட்டு தமிழ் மக்களின் காணிகளில் சிங்களவர்களை குடியேற்றுவதே பிரச்சினையானது எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒத்திகை – கடற்படையை சேர்ந்த ஐவர் கடலில் வீழ்ந்துள்ளனர்

Posted by - February 3, 2017

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டிந்த ஐந்து பேர் கடலில் விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் தலைவர்கள் இலங்கையை துண்டுகளாக பிரித்து தனியான பொலிஸ் சேவையுடன் மாநில அரசாங்கங்களை உருவாக்க முயற்சி

Posted by - February 3, 2017

நாட்டின் தற்போதைய அரசியல் தலைவர்கள் இலங்கையை துண்டுகளாக பிரித்து தனியான பொலிஸ் சேவையுடன் மாநில அரசாங்கங்களை உருவாக்க தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத்திட்டங்கள் ஊடாக கொழும்பு கிராண்ட் ஒரியண்டல் ஹொட்டல் போன்ற சிறிய வர்த்தகங்கள் முதல் எமது அரசாங்கத்தின் பெரிய திட்டமான நுரைச்சோலை அனல்மின் நிலையம் வரை அரசுக்கு

கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம்

Posted by - February 3, 2017

  முல்லைத்தீவு-கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 49 பேருக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி பொதுமக்கள் இன்றுமுதல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக  தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர். 60 வருடத்திற்கு மேலாக தாம் வசித்து வந்த நிலையில் 2009