இன, சமய பேதங்களைத் தாண்டிய மனித நேயமிக்க அமைதியான நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையை உருவாக்க சவால்களை வெற்றிகொள்ள தயாராகுவோம்- பிரதமர் ரணில்
சவால்களை வெற்றிகொள்ள துணிச்சலுடனும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட இந்த சுதந்திர தினத்தில் விசேடமாக உறுதி பூணுவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். மிகவும் மோசமான ஓர் ஆட்சிக் காலத்தைத் தோற்கடித்து நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியான நிலைமையில், காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்டு தான் சுதந்திரத்தின் 69 ஆவது வருடப் பூர்த்தியைக் கொண்டாடுகின்றமை தனிச்சிறப்பு மிக்க சந்தர்ப்பம் என நான் நினைக்கிறேன்

