மாலபே சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தடியடி தாக்குதல் நடத்தக் கூடாது -மகிந்த ராஜபக்ச

Posted by - February 5, 2017

மாலபே சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தடியடி தாக்குதல் நடத்தக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமது குறைகளை முன்வைக்க வேறு ஒருவரும் இல்லாத காரணத்தினாலேயே தமது குறைகளை கூற ஜனாதிபதியை தேடிச் செல்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். குருணாகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மருத்துவ மாணவர்கள் எதிர்கால மருத்துவர்கள், அவர்கள்

வவுனியா பேருந்து சேவை பிரச்சினைக்குத் தீர்வு காண மூன்று யோசனைகள்

Posted by - February 5, 2017

வவுனியாவில் தனியார் பஸ் சேவையாளர்களுக்கும், இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் வவுனியா அரசாங்க அதிபருக்கு மூன்று யோசனைகளை முன்வைத்துள்ளார். இரு தரப்பினரும் ஒரே இடத்தில் இருந்து சேவையாற்ற முடியாது என்பது தெளிவாகியிருப்பதனால், வவுனியா நகரில் பழைய இடத்தில் இருந்தே இலங்கை போக்குவரத்துச் சபையினரை சேவையில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொலிஸ் நிலையத்திற்கு எதிரில் உள்ள காணியொன்றில் தனியார் பஸ்களுக்கான நிலையத்தை அமைத்து,

கேப்பாப்புலவில் காணி மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்தித்தார் அமைச்சர் ப.சத்தியலிங்கம்

Posted by - February 5, 2017

கேப்பாப்புலவில் இன்று ஆறாவது நாளாக காணி மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் சந்தித்துள்ளார். இந்த போராட்டத்திற்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளதோடு, போராட்டக்காரர்கள் தமது உடல்ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை இன்று பிற்பகல் 5:30 மணியளவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் நிலைப்பாட்டை ஆராய்ந்துள்ளார். நேற்றைய தினம் முல்லைத்தீவில் 69 ஆவது சுதந்திரதினத்தில் பிரதம அதிதியாக

மட்டக்களப்பில் முள்ளந்தண்டு மற்றும் கண் சிகிச்சை இலவச முகாம்கள்

Posted by - February 5, 2017

கொழும்பு பட்டக்கண்ணு பவுன்டேசனின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண விஸ்வகர்மா பொற்றொழிலாளர் சம்மேளனம் நடாத்திய இலவச சிகிச்சை முகாம் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது. முள்ளந்தண்டு உபாதைக்கு உள்ளானவர்களுக்கு விசேட சிகிச்சை முகாமும் கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வாக இது நடாத்தப்பட்டது. இதன்போது சுமார் 250 பேருக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டு கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன் சுமார் 70க்கும் மேற்பட்டவர்களுக்கு முள்ளந்தண்டு உபாதை சிகிச்சைகள் வழங்கப்பட்டது. மேலதிக சிகிச்சை தேவைப்படுபவர்களை கொழும்புக்கு வருமாறும் கோரப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வருகைத்தந்த

அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கி நிதிகளை தனது சொந்த தேவைகளுக்காக செலவு செய்துள்ளார் -வசந்த சமரசிங்க

Posted by - February 5, 2017

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், மத்திய வங்கி நிதிகளை தனது சொந்த தேவைகளுக்காக செலவு செய்துள்ளார் என ஊழலுக்கு எதிரான குரலின் அமைப்பாளர் வசந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். அர்ஜூன் மகேந்திரன், 21 மாதங்களில் 163 நிகழ்வுகளுக்கு, 66 மில்லியன் ரூபா மத்திய வங்கி நிதிகளை முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளார் என வசந்த சமரசிங்க இன்று தெரிவித்துள்ளார். அர்ஜூன் மகேந்திரன் பதவி வகித்த காலத்தில் அவரது வெளிநாட்டு பயணங்கள் மற்றும் அவரது செலவீனங்கள் குறித்து மத்திய

சுமந்திரன் படுகொலை முயற்சி தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மீது போதைப் பொருள் குற்றச்சாட்டு-சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - February 5, 2017

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 5 பேரும் திட்டம் தீட்டினார்கள் என பொலிஸார் நீதிமன்றில் கூறவில்லை. அவர்கள் மீது போதை பொருட்களை வைத்திருந்ததாகவே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த விடயத்தில் எந்தளவு உண்மையுள்ளது என எண்ணத்தோன்றுகின்றது என கூறியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாணத்தில் படையினரை தொடர்ந்தும் நிலை கொள்ள செய்வதற்கான முயற்சியா எனவும் எமக்கு சந்தேகம் உள்ளது என கூறியுள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற

மீண்டும் உணவுப் பொதியின் விலை உயர்வு

Posted by - February 5, 2017

உணவுப் பொதியொன்றின் விலை 10 ரூபாய் அல்லது 15 ரூபாயினால் ​அதிகரிக்கப்படவுள்ளதாக, இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். நாட்டில் பல பாகங்களிலும் தற்போது தேங்காய்ப் பற்றாக்குறை காணப்படுவதனால், தேங்காயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே உணவுப் பொதியின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை தேங்காய் ஏற்றுமதியை உடனடி​யாக நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், அரசாங்க நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உணவுப் பொதியொன்றினை, 50 ரூபாய்க்கு வழங்க முடியாத நிலைமைக்குத்

மஸ்கெலியா ரிகாடன் பகுதியிலிருந்து நல்லதண்ணி வரை வீதியோரங்களில் பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த 4 பேருக்கு அபராதம்

Posted by - February 5, 2017

மஸ்கெலியா ரிகாடன் பகுதியிலிருந்து நல்லதண்ணி வரை வீதியோரங்களில் உள்ள கடைகளில் மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த விற்பனை நிலைய உரிமையாளர்கள் நான்கு பேருக்கு எதிராக ஹட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மஸ்கெலியா ரிகாடன் பகுதியிலிருந்து நல்லதண்ணி வரை வீதியோரங்களில் உள்ள 10 விற்பனை நிலையங்கள் மஸ்கெலியா பிரதேச பொது சுகாதார அதிகாரிகளினால் சோதனையிடப்பட்டது. விலைப்பட்டியல் காட்சியப்படுத்தாமை, காலாவதியான பொருட்களை வைத்திருந்தமை, கூடிய விலைக்கு

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு உதவ முன்வருமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

Posted by - February 5, 2017

 மட்டக்களப்பில் நடைபெறவுள்ள கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு உதவ முன்வருமாறு பல்வேறு தரப்பினருக்கும் தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த அழைப்பினை தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ரி.வசந்தராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்விற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே திட்டமிட்டது போன்று இரண்டு பேரணிகள் நடைபெறமாட்டாது. கல்லடி பாலம் அருகில் இருந்து ஒரு பேரணி

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணிகளுடன் பயணத்தை தொடர்ந்த தனியார் பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல்

Posted by - February 5, 2017

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணிகளுடன் பயணத்தை தொடர்ந்த தனியார் பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி நேற்று முன்தினம்  மாலை 80க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்த தனியார் பேருந்து கொடிகாமம் சந்தியை கடந்து செல்லும் போது பேரூந்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் பேருந்தின் சாரதி புஸ்பராசா சிவானந்தன் (31 வயது) என்பவர் படுகாயமடைந்ததுடன் பேருந்தில் பயணம் செய்த