யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணிகளுடன் பயணத்தை தொடர்ந்த தனியார் பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல்

272 0

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணிகளுடன் பயணத்தை தொடர்ந்த தனியார் பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி நேற்று முன்தினம்  மாலை 80க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்த தனியார் பேருந்து கொடிகாமம் சந்தியை கடந்து செல்லும் போது பேரூந்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் பேருந்தின் சாரதி புஸ்பராசா சிவானந்தன் (31 வயது) என்பவர் படுகாயமடைந்ததுடன் பேருந்தில் பயணம் செய்த இருவரும் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.