மீண்டும் உணவுப் பொதியின் விலை உயர்வு

239 0

உணவுப் பொதியொன்றின் விலை 10 ரூபாய் அல்லது 15 ரூபாயினால் ​அதிகரிக்கப்படவுள்ளதாக, இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல பாகங்களிலும் தற்போது தேங்காய்ப் பற்றாக்குறை காணப்படுவதனால், தேங்காயின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே உணவுப் பொதியின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை தேங்காய் ஏற்றுமதியை உடனடி​யாக நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள அவர், அரசாங்க நிறுவனங்களின் ஊழியர்களுக்கு உணவுப் பொதியொன்றினை, 50 ரூபாய்க்கு வழங்க முடியாத நிலைமைக்குத் தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.