தீர்வு முன்வைக்கப்படாவிடின் போராட்டத்தின் வடிவம் மாறும்-கேப்பாப்பிலவு மக்கள்

Posted by - February 6, 2017

புதுக்குடியிருப்பு பிரதேச செயலத்திற்கு முன்னாள் தீர்வின்றி போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு இன்றையதினம் கலைஞர் கழகம், விளையாட்டு கழகம், மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இன்று ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர். 49 குடும்பங்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை இராணுவம் சுவீகரித்து நிலைகொண்டுள்ள நிலையில் பொதுமக்கள் தொடர்ச்சியான அகதி வாழக்கையை முன்னெடுத்துள்ளனர். இந்த

நிதிச் சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை-ரவி கருணாநாயக்க

Posted by - February 6, 2017

இலங்கையின் கடன் சுமையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளால் தேவையற்ற நிதிச் சுமையை தாங்க வேண்டியுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். கண்டி அஸ்கரி பீடத்தின் மகா நாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் மற்றும் மல்வத்துபீட மகா நாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் ஆகியோரை நிதியமைச்சர் சந்தித்தார். அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மக்களுக்கான நிவாரணம் வழங்கியமை குறித்து மகாநாயக்கர்கள்

புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்த தீர்மானிக்கவில்லை-நிமால் சிறிபால டி சில்வா

Posted by - February 6, 2017

புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்த தீர்மானிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.   புகையிரத திணைக்களத்தை தனியார் மயப்படுத்தவோ அல்லது அதிகாரசபையாக மாற்றியமைக்கவோ எவ்வித உத்தேசமும் கிடையாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். புகையிரதத்தில் பயணிப்போரின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் நாட்டில் பயணிகளில் 8 வீதமானவர்களே புகையிரதசேவையை பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். புகையிரத இயந்திரங்கள் மற்றும் புகையிரத் பெட்டிகளை கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி ரவி, கிரியெல்ல, சாகல ஆகியோரின் அமைச்சுகளை நீக்குமாறு கோரிக்கை

Posted by - February 6, 2017

ஐக்கிய தேசியக் கட்சியின் சில அமைச்சர்களை அவர்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து நீக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோரை நீக்குமாறே யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் கூறியுள்ளார். எனினும் இந்த அமைச்சர்களை நீக்குவது தொடர்பில்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது,இது ஜனநாயகத்துக்கு பலம் சேர்க்கும் மாபெரும் வெற்றியாகும்- எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

Posted by - February 6, 2017

நல்லாட்சி அரசு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு பலம் சேர்க்கும் மாபெரும் வெற்றியாகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் சட்டத்தை அமுல்படுத்துவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார். அதற்கமைய தான் வழங்கி வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளார். இது நல்லாட்சி அரசின் மாபெரும் சாதனையாகும் என அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்த்துள்ளார். ஜனநாயகத்துக்கு பலம்

2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர எதிர்பார்ப்பு

Posted by - February 6, 2017

இவ் வருடம் இலங்கைக்கு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர எதிர்பார்த்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

புதிய சட்டம் வகுத்தும் பயனை பெற முடியாது!

Posted by - February 6, 2017

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இலங்கையில் கடந்த வௌ்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் அதன் பயனைப் பெறுவதில் சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

பிள்ளையான் மீண்டும் சிறையில்

Posted by - February 6, 2017

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திகாந்தன் மீதான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.