மதுபான சாலைகளால் கலாச்சார சீர்கேடுகள் இடம்பெறுகின்றது : யோகேஸ்வரன் எம்.பி
வாழைச்சேனையில் விபுலானந்தர் வீதி என்ற புனிதமான பெயர் இருக்கின்ற வீதியில் இரண்டு மதுபானசாலைகள் இருக்கின்றன. இதன் காரணமாக கலாச்சார சீர்கேடுகள் இடம்பெறுகின்றன, பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அகற்றுவதற்கு பெற்றோர்களும் உதவிபுரிய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

