மதுபான சாலைகளால் கலாச்சார சீர்கேடுகள் இடம்பெறுகின்றது : யோகேஸ்வரன் எம்.பி

Posted by - February 14, 2017

வாழைச்சேனையில் விபுலானந்தர் வீதி என்ற புனிதமான பெயர் இருக்கின்ற வீதியில் இரண்டு மதுபானசாலைகள் இருக்கின்றன. இதன் காரணமாக கலாச்சார சீர்கேடுகள் இடம்பெறுகின்றன, பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அகற்றுவதற்கு பெற்றோர்களும் உதவிபுரிய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு

Posted by - February 14, 2017

வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது. இந்த தகவலை ஐக்கிய நாடுகளின் அரசியல் துறை செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் வெளியிட்டுள்ளார். உலகலாளவிய ரீதியாக நாடுகளுக்கிடையே பிளவுகள் ஏற்படும் தருணத்தில் இலங்கை வழங்கிய அமைதி காக்கும் பணிகளை அவர் வரவேற்றுள்ளார். இதுதவிர, பொது மனிதாபிமான ரீதியாக அவர்கள் செயற்பட்டதாகவும் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி தரப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில், ஐக்கிய நாடுகளின்

நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு பயப்பட வேண்டாம்: அமைச்சர் ராஜித

Posted by - February 14, 2017

சுகாதார சேவையின் நன்மைக்காக கடமைகளை செய்யும் போது பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு பயந்து செயற்பட வேண்டாம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் இறக்குமதி அரிசிகளுக்கு தனித்தனி கட்டுப்பாட்டு விலை – ஜனாதிபதி ஆலோசனை

Posted by - February 14, 2017

இறக்குமதி செய்யப்படும் மற்றும் தேசிய அரிசிகளுக்காக தனித்தனியே கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும அரிசி இறக்குமதியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். சந்தையில் எப்போதும் அரிசி தட்டுப்பாடு நிலவக் கூடாது என்றும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியுள்ளார். மக்களுக்கு நிவாரண விலையில் அரிசியை விநியோகிப்பதற்கான முறைமை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரிசி இறக்குமதியின் போது

கிளிநொச்சியில் வீடுகளுக்கு செல்லாத மின்சார சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடகின்றன

Posted by - February 14, 2017

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் பல கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மின் கட்டணத்திற்கான  சிட்டைகள் வழங்கப்பட்டவில்லை. ஆனால் பல  கிராமங்களுக்குரிய நூற்றுக்கணக்கான  மின் கட்டண சிட்டைகள் வீதிகளில்  சிதறிக்கிடக்கின்றன. கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் பொறிக்கடவை சந்தி தொடக்கம் குடமுறுட்டி பாலம் வரையான பகுதிகளில் இவ்வாறு கிளிநொச்சி மின்சார சபையின்  மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் எறியப்பட்டுள்ளது. குறித்த மின் கட்டண சிட்டைகள் கடந்த வருடம் நவம்பா் மாத்திற்குரியதும், கிளிநொச்சி மாவட்டம்

அதிகாரப் பகிர்வில் ஆகக்கூடிய அதிகாரங்களை பெற முயல வேண்டும் -கிழக்கு முதலமைச்சர்

Posted by - February 14, 2017

உருவாக்கப்படவிருக்கின்ற புதிய அரசியலைப்பில், தமிழ், முஸ்லிம் சமூகங்கள் கூட்டாக இணைந்து ஆகக்கூடிய அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முயன்று வருவதாக, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.  ஏறாவூரில்  நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற செயற்றிட்டங்களின் அமுலாக்கம் தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், ‘தமிழ், முஸ்லிம் மக்களினதும் சமூகத் தலைமைகளினதும் உறவு, தொடர்ச்சியாக வலுப்படுத்தப்பட்டு, எங்களுக்குள் ஒரு தீர்க்கமான உடன்பாடு எய்யப்பட வேண்டும் என்பதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் தமிழ்த்

கிளிநொச்சி அரச அதிபர் கிண்ணத்ததை கைப்பற்றியது கரைச்சி

Posted by - February 14, 2017

கிளிநொச்சிமாவட்டசெயலகநலன்புரிசங்கத்தினால் 2016ம் ஆண்டுக்ககானஅரசஅதிபர் வெற்றிக்கிண்ணப் துடுப்பாட்ட போட்டி கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்றது. வருடந்தோறும் நடைபெற்றுவரும் இவ் அரசஅதிபர் வெற்றிக்கிண்ணப்  போட்டியில் இம்முறைமாவட்டத்திலுள்ள கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேசசெயலகஅணிகளும் மற்றும் மாவட்டசெயலக அணியும் போட்டியிட்டன இதில்   அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்ததை கரைச்சி பிரதேச செயலக அணிதட்டிக்கொண்டது. பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட அரச அதிபர், கருத்து தொிவித்த போது  இப்போட்டியானது மாவட்ட மற்றும் பிரதேச செயலக

புலிகளின் ஆட்லறி செல்கள் மீட்பு

Posted by - February 14, 2017

முல்லைத்தீவு அம்பகாமம் காட்டுக்குள் இருந்து இன்று  புலிகள் பயன்படுத்திய ஆட்லறி செல்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானப்படையினரால் குறித்த ஆட்லறி செல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு குண்டு செயலிழக்கும் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விமானப்படையினா் தெரிவித்துள்ளனா். ஒவ்வொரு   எறிகனையும்  16 கிலோ கிராம் கொண்டது என்றும் விமானப்படையினா் தெரிவித்துள்ளனா். குறித்த அம்பகாமம் காட்டுப்பகுதிக்கு அருகில்தான் 2009 முன் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய  விமானப் படைத்தளம் காணப்படுகிறது. தற்போது அது சிறிலங்கா விமானப்படையினரின் பயன்பாட்டில் உள்ளது.

லொத்தர் சபை மீதான நன்மதிப்பு குறைகிறது – பந்துல

Posted by - February 14, 2017

லொத்தர் சபை மீது மக்கள் வைத்திருந்த நன்மதிப்பு நாளாந்தம் குறைடைந்து வருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இன்று நள்ளிரவு முதல் அதனை ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு வருட காலப்பகுதியினுள் நாட்டின் சகல துறைகள் மீதான நம்பிக்கையை சிதறிடிக்கும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் மலேசியாவில் கொலை

Posted by - February 14, 2017

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் – யுன் இன் சகோதரர் முறையிலான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக, தென்கொரிய ஊடகமான யோன்ஹாப் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கொலை நேற்று இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்த ஊடகம், கொலைக்கான காரணம் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. எவ்வாறாயினும் இதுகுறித்து வடகொரியா இதுவரையில் உத்தியோக பூர்வமான எந்த அறிவித்தலையும் விடுக்கவில்லை. தென்கொரிய செய்திகளின் படி, மலேசியாவின் கோலாலம்பூர் வானூர்தி நிலையத்தில் வைத்து விஷ ஊசிகளை பயன்படுத்தி, இரண்டு