நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு பயப்பட வேண்டாம்: அமைச்சர் ராஜித

286 0

சுகாதார சேவையின் நன்மைக்காக கடமைகளை செய்யும் போது பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு பயந்து செயற்பட வேண்டாம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை புதிய நிர்வாக கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற ஹம்பாந்தோட்டை மாவட்ட சுகாதார நிறுவனங்களின் தலைவர்களை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சில அரச அதிகாரிகள் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அஞ்சி தமது கடமைகளை மந்தமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு பயந்து கடமைகளை செய்ய வேண்டாம். பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.