உள்நாட்டு மற்றும் இறக்குமதி அரிசிகளுக்கு தனித்தனி கட்டுப்பாட்டு விலை – ஜனாதிபதி ஆலோசனை

240 0

இறக்குமதி செய்யப்படும் மற்றும் தேசிய அரிசிகளுக்காக தனித்தனியே கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும அரிசி இறக்குமதியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

சந்தையில் எப்போதும் அரிசி தட்டுப்பாடு நிலவக் கூடாது என்றும் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.

மக்களுக்கு நிவாரண விலையில் அரிசியை விநியோகிப்பதற்கான முறைமை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரிசி இறக்குமதியின் போது விதிக்கப்படும் வரி நிவாரணம் உரிய வகையில் மக்களை சென்றடைய வேண்டும் என்றும் ஜனாதிபதி பணித்துள்ளார்.