வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் மலேசியாவில் கொலை

320 0

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் – யுன் இன் சகோதரர் முறையிலான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக, தென்கொரிய ஊடகமான யோன்ஹாப் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கொலை நேற்று இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்த ஊடகம், கொலைக்கான காரணம் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.

எவ்வாறாயினும் இதுகுறித்து வடகொரியா இதுவரையில் உத்தியோக பூர்வமான எந்த அறிவித்தலையும் விடுக்கவில்லை.

தென்கொரிய செய்திகளின் படி, மலேசியாவின் கோலாலம்பூர் வானூர்தி நிலையத்தில் வைத்து விஷ ஊசிகளை பயன்படுத்தி, இரண்டு அடையாளம் தெரியாத பெண் முகவர்கள் மூலம், இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.