லொத்தர் சபை மீதான நன்மதிப்பு குறைகிறது – பந்துல

264 0

லொத்தர் சபை மீது மக்கள் வைத்திருந்த நன்மதிப்பு நாளாந்தம் குறைடைந்து வருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இன்று நள்ளிரவு முதல் அதனை ஜனாதிபதியின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வருட காலப்பகுதியினுள் நாட்டின் சகல துறைகள் மீதான நம்பிக்கையை சிதறிடிக்கும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவற்றின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.