ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்கக் கோரி கொட்டகலையில் ஆர்ப்பாட்டம்

Posted by - November 23, 2017

ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்கக் கோரி ஆசிரியர் பயிலுனர்கள் இன்று கொட்டகலையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற பாடசாலைகளில் சேவையாற்றவென இணைத்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர் உதவியாளர்களை நிரந்தரமாக்கக் கோரி இன்று காலை கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் காலை 8 மணியளவில் ஆசிரிய கலாசாலை முன்னுள்ள அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இவ்வார்ப்பாட்டகாரர்கள் “ஆசிரியர் உதவியாளர்களை உடனே 3 – ∏ இற்கு உள்வாங்கு” ,

ஜெயலலிதா மரணம்: அரசு மருத்துவர்கள் 2 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்

Posted by - November 23, 2017

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள் இரண்டு பேர் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இலங்கையில் பொழியவுள்ள கடும் மழை; வெள்ள எச்சரிக்கையும் விடுப்பு

Posted by - November 23, 2017

வட மற்றும் மத்திய மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்குள் பெய்யவுள்ள கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகீழ் பருவ மழை கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகிறது. குறிப்பாக நீரேந்துப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் நீர்த் தேக்கங்களும் நிரம்பி வருகின்றன. என்றபோதும், அந்தமான் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் இலங்கை நோக்கி நகர்வதால், எதிர்வரும் 26ஆம் திகதி வரை இலங்கையில் கடுமையான மழையை எதிர்பார்க்கலாம் என

3 பசு மாடுகளைத் திருடிய இருவருக்கு விளக்கமறியல்

Posted by - November 23, 2017

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரக்குலம் பிரதேசத்தில் இருந்து சிறியரக பட்டா வானத்தில் 3 பசு மாடுகளை திருடிச் சென்ற இருவரை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியவில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார். பொலிசார் கரடியனாறு பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் சம்பவதினமான செவ்வாய்கிழமை இரவு ஈடுட்டுக் கொண்டிருந்தபோது சிறியரக பட்டா வானத்தில் இருவர் 3 பசுமாடுகளை எடுத்துச் சென்றநிலை, சந்தேகம் கொண்ட பொலிசார் இதனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது,

தப்பியோடிய 26,000 இராணுவத்திரை பிடிக்க நடவடிக்கை

Posted by - November 23, 2017

இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என இராணுவம் தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கை நாடு பூராகவும் மேற்கொள்ளப்படும் என இராணுவ பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். தப்பியோடிய வீரர்களுக்குச் சட்ட ரீதியான முறையில் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலம் நேற்றைய தினம் நிறைவடைந்தது. கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி முதல் வழங்கப்பட்ட குறித்த பொது மன்னிப்பு காலப்பகுதியில் 11,232 உறுப்பினர்கள் சுய விருப்பத்தின் பேரில் விலகியுள்ளதாக

அடுத்த மாதம் முதல் LED மின்குமிழ் இலவசம்

Posted by - November 23, 2017

அடுத்த மாதம் முதல் 9 வோட் மின் சக்தியில் எரியக் கூடிய எல்.ஈ.டி. மின் குமிழ்களை விநியோகிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு 100 லட்சம் பல்ப்களை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. உயர்ந்துள்ள மின் பாவனையைக் மட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு கல்வி அமைச்சரின் பதவி பறிபோகிறதா?

Posted by - November 23, 2017

 தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் விலகியதையடுத்து வடக்கு மாகாண கல்வி அமைச்சர் ஆளும் கட்சி உறுப்பினர் என்ற தகுதியை இழந்துள்ளார் எனத் தெரிவித்து அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவருகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து புதிய முன்னணியை உருவாக்கும் பணியில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஈடுபட்டுள்ளது. அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இல்லாத கட்சியின்  உறுப்பினர் ஒருவர் அமைச்சர் பதவியில் இருக்க முடியாது என வடக்கு மாகாண ஆளும்

ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் இர­க­சி­ய­மாக கடன்­களை பெற்­றுள்­ளது- ரணில்

Posted by - November 23, 2017

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் இர­க­சி­ய­மாக கடன்­களை பெற்­றுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்த கூற்றை முற்­றாக மறுத்­துள்ள கூட்டு எதிர்க்­கட்சி, உரிய விசா­ர­ணை­களை மேற்­கொள்­ளு­ மாறு வலி­யு­றுத்தி சபா­நா­யகர் கரு­ஜெ­ய­ சூ­ரி­ய­வி­டத்தில் எழுத்­து­மூ­ல­மாக கோரி க்கை விடுத்­துள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கூட்டு எதிர்க்­கட்­சியின் உறுப்­பினர் கருத்து வெளியி­டு­கை­யி­லேயே இத்­த­க­வலை வெளியிட்­டனர். கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான தினேஷ் குண­வர்­தன, பந்­துல குண­வர்­தன, விமல்­வீ­ர­வன்ஸ, ரமேஷ் பத்­தி­ரன,

உருளைக்கிழங்கிற்கு நீக்கப்பட்ட வரியை மீண்டும் அமுல்படுத்த வேண்டும்.!

Posted by - November 23, 2017

உருளைக்கிழங்கிற்கான வரியை நீக்கியதன் காரணமாக மலை­யக விவ­சா­யிகள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுப்பதாக சபையில் சுட்­டிக்­காட்­டிய கல்வி இரா­ஜங்க அமைச்சர் வீ.இரா­தா­கி­ருஷ்ணன், நீக்கப்பட்ட வரி மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்பெற்ற 2018 ஆம் ஆண்­டுக்­கான வர­வு­–செ­ல­வுத்­ திட்­டத்தின் கமத்­தொழில், மகா­வலி அபி­விருத்தி மற்றும் சுற்­றாடல், நீர்ப்­பா­சன மற்றும் நீர் வள­ முகா­மைத்­துவம், ஆரம்பக் கைத்­தொழில் ஆகிய அமைச்­சுக்­க­ள் தொடர்­பான குழுநிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனை வலியுறுத்தினார். அவர்

கஞ்சாவுடன் இளைஞர் கைது

Posted by - November 23, 2017

வவுனியா, இ.போ. ச பேருந்து நிலையத்தில் வைத்து கேரள கஞ்சாவுடன் இளைஞன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா இ.போ.ச. பேருந்து நிலையத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வந்த பேருந்தில் 2 கிலோ 75 கிராம் கேரள கஞ்சாவினை பொதி செய்து எடுத்து வந்த கிரிஷாந்த பண்டார என்ற வவுனியா குடாகச்சக்கொடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரையே நேற்றிரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து ஹெப்பிட்டிக்கொலவ பகுதிக்கு கேரள கஞ்சாவினை குறித்த இளைஞன் எடுத்துச் செல்லவிருந்ததாகவும்