கஞ்சாவுடன் இளைஞர் கைது

314 0

வவுனியா, இ.போ. ச பேருந்து நிலையத்தில் வைத்து கேரள கஞ்சாவுடன் இளைஞன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா இ.போ.ச. பேருந்து நிலையத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வந்த பேருந்தில் 2 கிலோ 75 கிராம் கேரள கஞ்சாவினை பொதி செய்து எடுத்து வந்த கிரிஷாந்த பண்டார என்ற வவுனியா குடாகச்சக்கொடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரையே நேற்றிரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து ஹெப்பிட்டிக்கொலவ பகுதிக்கு கேரள கஞ்சாவினை குறித்த இளைஞன் எடுத்துச் செல்லவிருந்ததாகவும் பொலிசாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment