வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து

Posted by - November 25, 2017

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளுடன் சென்ற தனியார் போக்குவரத்து பஸ்  ஒன்று தனது வேக கட்டுப்பாட்டை இழந்து உணவகத்தின் முன்பகுதியுடன் மோதியதில் அதில் பயணித்த சிலர் சிறு காயங்களுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் விபத்து இன்று அதிகாலை 12.40 மணியளவில் புத்தளம் தில்லையடி லாஸா உணவகத்துக்கு முன்பாக இவ்  இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வவுனியாவிலிருந்து கொழும்பு பயணிகளுடன் நோக்கி புறப்பட்ட தனியார் பஸ் முன்னாள் சென்ற ஒரு பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர்பாராமல் முன்னே கெப்

மட்டக்களப்பு மீனவர்களின் உபகரணங்கள் மீது அசிட் வீச்சு

Posted by - November 25, 2017

மட்டக்களப்பு, ஏறாவூர், புன்னைக்குடா கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த மீன் பிடிப் படகு மற்றும் வலை என்பன மீது மர்ம நபர்கள் அசிட் ஊற்றி சேதப்படுத்தியுள்ளனர். சேதமாக்கப்பட்ட மீன்பிடி உபகரணங்களின் பெறுமதி சுமார் பதினைந்து இலட்ச ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கடற்கொந்தளிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீன்பிடி உபகரணங்களும் சேதமாக்கப்பட்டிருப்பது மீனவர்களை கடும் பிரச்சனைகளுக்குள் தள்ளியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடந்தை-குமார் குணரத்னம்

Posted by - November 25, 2017

உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடந்தையாக இருப்பதாக முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் குற்றம் சுமத்தியுள்ளார். ஹட்டனில்  இன்று இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உண்மையான காரணம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கும், ஒன்றினைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையில் நடக்கும் முரண்பாடே ஆகும். உள்ளூராட்சி

அரசுக்கு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர் சங்கம் எச்சரிக்கை

Posted by - November 25, 2017

‘சைட்டம்’ தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுவது குறித்த அரசின் செயற்பாடுகளில் தாம் விழிப்புடன் இருப்பதாக, அரச மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், மேற்படி சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் நிமல் கருணாசிறி இதனைத் தெரிவித்தார். நீண்டகாலமாக சர்ச்சைக்கும் பல்வேறு சச்சரவுகளுக்கும் ஆளாகி வந்த சைட்டம் பிரச்சினை, அக்கல்லூரியை மூடிவிடுவதாக அரசு அறிவித்ததையடுத்து ஓய்ந்துள்ளது. சுமார் பத்து மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் அரச மருத்துவ பல்கலைக்கழகங்கள் இயங்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில்,

முஸ்தபாவுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்துள்ளேன்- மஹிந்த

Posted by - November 25, 2017

அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உட்பட ஏனைய கட்சிகள் என்ன வகையான நடவடிக்கையை முன்னெடுக்கின்றன என்பதை தான் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை அநீதியானது என ஐ.தே.கட்சியோ அல்லது வேறு கட்சிகளோ கருத்துத் தெரிவிப்பதாயின் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இதற்கு முன்னர் முன்வைத்த நம்பிக்கையில்லாப்

ஆவா குழு முஸ்லிம் இளைஞனை விடுவிக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் கடும்முயற்சி !

Posted by - November 25, 2017

யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவில் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் 23 வயது முஸ்லிம் இளைஞன் ஒருவன் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமையையடுத்து ஆவா குழு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்பொழுது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் விசாரணை செய்யப்பட்டு வரும் ஆவா குழு தலைவரின் வாக்கு மூலத்தையடுத்தே இந்த முஸ்லிம் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இக்குழுவைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளமை இதுவே முதற்தடவை

நாளை மாலை 6 மணி முதல் கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு

Posted by - November 25, 2017

கொழும்பை அண்மித்த  சில பகுதிகளுக்கு நாளை (26) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி முதல் 9 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதன்படி, கொட்டாவ, பன்னிபிட்டிய, தெபானாம மற்றும் ருக்மலே ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மூன்றரை லட்சம் ரூபா பணம், 105 கிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

Posted by - November 25, 2017

களனி, பட்டியவல சந்தியில் ஹெரோய்ன் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இவர் கைதுசெய்யப்பட்டார். குறித்த  சந்தேகநபர் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபரிடமிருந்து 105 கிராம் ஹெரோய்ன் ரக போதைப் பொருளும் 363,900 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் முதலாவது செயற்கைக் கோள் 2020 இல் விண்ணுக்கு

Posted by - November 25, 2017

சேர் ஆதர்சீ க்ளாக் மத்திய நிலையம் ஏற்பாடு செய்யும் இலங்கையின் முதலாவது செயற்கைக் கோள் 2020 ஆம் ஆண்டு விண்ணுக்கு ஏவப்படும் என  தெரிவிக்கப்படுகின்றது. நனோ தொழில்நுட்பத்துடனான இந்த செயற்கைக் கோள் தயாரிப்புப் பணிக்கான தொழில்நுட்பம் மற்றும்  பொருட்கள் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக ரஷ்யாவுடன் இலங்கை உடன்படிக்கையொன்றை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

63ஆவது பிறந்தநாள் காணும் எம் தேசத்தின் தலைமகனுக்கு 100 பிரபாகரன் பெயர்கொண்டவர்கள் ஒரே மேடையில் வாழ்த்தரங்கம்

Posted by - November 25, 2017

63ஆவது பிறந்தநாள் காணும் எம் தேசத்தின் தலைமகனுக்கு 100 பிரபாகரன் பெயர்கொண்டவர்கள் ஒரே மேடையில் வாழ்த்தரங்கம் நேரலை 25/11/2017 தமிழக நேரம் காலை 09.30 மணி பிரித்தானிய நேரம் காலை 04.00மணி கீழ்வரும் இணைப்பினை அழுத்துவதன் மூலம் நேரலையில் பார்வையிடலாம் https://youtu.be/tAfDFYsUSqE