கொழும்பை அண்மித்த சில பகுதிகளுக்கு நாளை (26) ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி முதல் 9 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, கொட்டாவ, பன்னிபிட்டிய, தெபானாம மற்றும் ருக்மலே ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.