காங்கிரஸ் முன்னாள் எம்பி வள்ளல்பெருமான் காலமானார்

Posted by - November 29, 2017

சிதம்பரம் தொகுதியில் 3 முறை எம்பியாக பணியாற்றிய டாக்டர் வள்ளல்பெருமான்(69) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டாக்டர் வள்ளல்பெருமான், 1984, 1989, 1991-ம் ஆண்டுகளில் சிதம்பரம் தொகுதி எம்பியாக 3 முறை பணியாற்றியவர். 2001-ல் ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை சார்பில் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இவரது மனைவி சரளாவும் டாக்டராவார். ஷிவ்மோகா என்ற மகன் உள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார்

முதல்வர் இன்று தொடங்குவதாக இருந்த தஞ்சாவூர் மேம்பால திறப்புக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

Posted by - November 29, 2017

தஞ்சாவூரில் இன்று முதல்வர் பழனிசாமி திறப்பதாக இருந்த ரயில்வே மேம்பாலத்தை திறக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்தது. தஞ்சாவூரைச் சேர்ந்த நீலகண்டன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தஞ்சாவூர் சந்தப்பிள்ளை பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பாலத்தின் நடுவில் நவ. 6-ல் பெரிய விரிசல் ஏற்பட்டது. பாலத்தை விரைவில் திறக்க வேண்டும் என்பதற்காக ஜல்லித்தூள் மற்றும் தார் கலவையைக் கொட்டி அவசரமாக அந்த விரிசல் சரி

சசிகலாவை சந்தித்த பிறகு ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் இன்று அறிவிப்பு: தனிக்கொடி பயன்படுத்துவதற்கு அவசியம் இல்லை என தினகரன் தகவல்

Posted by - November 29, 2017

சசிகலாவை இன்று சந்தித்த பிறகு ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளரை அறிவிக்க உள்ளதாக டிடிவி தினகரன் கூறினார். திருச்சி தனியார் ஹோட்டலில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எப்படி களப் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். கட்சியின் பொதுச் செயலாளரை நாளை (நவ.29) சந்தித்த பிறகு, அன்று மாலை ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளரை அறிவிப்போம். சட்டப் போராட்டம் திருச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமாகா போட்டியிடாது: வாசன் அறிவிப்பு

Posted by - November 29, 2017

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் த.மா.கா. போட்டியிடவில்லை என்றும் தேர்தல் களத்தில் ஒதுங்கி இருப்பதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக வாக்குப் பதிவுக்கு 2 நாள்கள் முன்பாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர் தேர்வை அனைத்து

கோத்தாபயவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை உத்தரவு

Posted by - November 29, 2017

பொது உடமை சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ம் திகதி வரை நிறுத்தி வைக்குமாறு மேமுறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. மேலும் சட்ட மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளை குறித்த தினத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுவிடுக்கப்பட்டுள்ளது. தான் கைது செய்யப்படக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதாக தெரிவித்து அதனை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர்

தலைவர் பிர­பா­க­ரனின் பிறந்த நாள், மாவீரர் தினம் : 30 சம்­ப­வங்கள் தொடர்பில் தகவல் சேக­ரிக்­கி­றது பொலிஸ்

Posted by - November 29, 2017

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் பிறந்த நாள், மாவீரர் நாள் தொடர்பில் வடக்கில் மட்டும் சுமார் 30 இற்கும் மேற்­பட்ட நிகழ்­வுகள் இம்­முறை பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். இந்த நிகழ்­வுகள்  குறித்தும் அதில் என்ன நடந்­தது என்­பது தொடர்­பிலும் முழு­மை­யாக அறிந்­து­கொள்ள தற்­போது பொலிஸார் அந்த நிக்ழ்­வுகள் குறித்து தகவல் சேக­ரித்து வரு­வ­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார். கடந்த 26 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை பிர­பா­க­ரனின்

10 மாதங்களில் 24 பேர் பலி

Posted by - November 29, 2017

செல்பி மோகத்தால் புகை­யி­ரத பாதை யில் செல்பி படம் எடுத்­து­க்கொண்­டி­ருந்த வேளையில் ரயி­லுடன் மோதி இவ்­வ­ருடம் ஜன­வரி மாதம் முதல் ஒக்­டோபர் மாத  காலப்­ப­கு­தி வரை 24 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக வீதி  பாது­காப்புக்­கான தேசிய பேர­வையின் ஒருங்­கி­ணைப்­பாளர் புத்­திக பிரதாப் தெரி­வித்தார். வீதி பாது­காப்பு தேசிய பேரவை   இல் ­லாத கார­ணத்தால் கடந்த வருடம் இதை­யொத்த சம்­ப­வங்கள் குறித்த   தர­வு­களை ஒப்­பிட்டு பார்க்க முடி­ய­வில்லை எனவும்  புத்­திக பிரதாப் மேலும் தெரி­வித்தார். இளைஞர் யுவ­தி­க­ளிடம் செல்பி மோகம்

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் ஆரம்பம்

Posted by - November 29, 2017

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்று (29) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை வைத்தியபீடத்துக்கான பாடப்பிரிவுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த வருட பெறுபேறுகளின் அடிப்படையில் 75 மாணவர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உயர்கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

படகு கவிழ்ந்து இருவர் பலி

Posted by - November 29, 2017

பண்டாரகம, அடுலுகம, கல்ஹேன பிரதேச ஆற்றில் படகில் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த இரு இளைஞர்களும் நீரில் மூழ்கியதை அடுத்து பிரதேசவாசிகள் அவர்களை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த நபர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் வேளையில் உயிரிழந்துள்ளனர். பண்டாரகம, அடுலுகம, பகுதியை சேர்ந்த 17, 21 வயதுடைய இளைஞர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் தொடர்பில் நீதவான் மற்றும் பிரேத பரிசோதனைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு கடலில் தீடீர் மாற்றம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

Posted by - November 29, 2017

முல்லைத்தீவு கடற்பகுதி நேற்று மாலை முதல், இதுவரை இல்லாத வகையில் மாற்றமடைந்து காணப்படுவதாக, அப் பகுதி மீனவர்கள் கடற்படையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து, அங்கு சென்ற கடற்படையினர், அடிவானம் வரை குறித்த கடற்பகுதி கறுப்பு நிறத்தில் காணப்பட்டதை அவதானித்துள்ளதாக தெரிகிறது. மேலும், மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என கடற்படையினர் அறிவித்துள்ளனர். எனினும், சம்பவத்திற்கு முன்னர் பல மீனவக் குழுவினர் கடலுக்கு புறப்பட்டுச் சென்று விட்டதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக, கடந்த மூன்று வாரங்களாக பெய்த மழையினால் முல்லைத்தீவு