தலைவர் பிர­பா­க­ரனின் பிறந்த நாள், மாவீரர் தினம் : 30 சம்­ப­வங்கள் தொடர்பில் தகவல் சேக­ரிக்­கி­றது பொலிஸ்

333 0

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரனின் பிறந்த நாள், மாவீரர் நாள் தொடர்பில் வடக்கில் மட்டும் சுமார் 30 இற்கும் மேற்­பட்ட நிகழ்­வுகள் இம்­முறை பதி­வா­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந்த நிகழ்­வுகள்  குறித்தும் அதில் என்ன நடந்­தது என்­பது தொடர்­பிலும் முழு­மை­யாக அறிந்­து­கொள்ள தற்­போது பொலிஸார் அந்த நிக்ழ்­வுகள் குறித்து தகவல் சேக­ரித்து வரு­வ­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

கடந்த 26 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை பிர­பா­க­ரனின் பிறந்த நாள் நிக்ழ்­வு­களும், நேற்று முன் தினம் மாவீரர் நாள் நிகழ்­வு­களும் வடக்கில் பதி­வா­கின. இது தொடர்பில் பல்­வேறு தர்ப்­பி­னரும் பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைத்து வரும் நிலையில், பொலி­ஸா­ரிடம் அது தொடர்பில் வின­விய போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்­னாண்­டோவின்  நேரடி  கட்­டுப்­பாட்டில், இந்த தகவல் சேக­ரிப்பு மற்றும் அதன் உள்­ள­டக்கம் தொடர்­பி­லான ஆய்வு நட­வ­டிக்­கைகள்   ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு சுட்டிக்காட்டினார்.

Leave a comment