லண்டன் மேயர் சாதிக் கான் அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா பயணம்!

Posted by - December 3, 2017

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்த பின்னர் பிரிட்டனில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக லண்டன் மேயர் சாதிக் கான் இன்று இந்தியா வருகை தர உள்ளார்.

நைஜீரியா: போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை தாக்குதலில் 13 பேர் பலி

Posted by - December 3, 2017

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை தாக்குதலில் 13 பேர் பலியானதாகவும், 50 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பிற மாநிலங்களுடன் 3 வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்களை இணைக்க கூடாது

Posted by - December 3, 2017

தமிழ்நாட்டில் உள்ள 3 மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்களை பிற மாநிலங்களில் உள்ள நிறுவனங்களுடன் இணைக்கும் முடிவை மத்திய வேளாண் அமைச்சகம் கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

மருதுகணேசுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் 7-ந் தேதி முதல் பிரசாரம்

Posted by - December 3, 2017

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருது கணேசை ஆதரித்து வருகிற 7-ந் தேதி முதல் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

ஊடகவியலாளரை தாக்க முற்பட்ட மர்ம நபர்கள்!!

Posted by - December 3, 2017

முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத மர்ம நபர்கள் ஊடகவியளாளர் ஒருவர் மீது தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று (சனிக்கிழமை) மாலை 06.25 அளவில் இடம்பெற்றுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒலிபரப்பாகச் செயற்படும் யாழ்FM இல் கடமையாற்றும் ஊடகவியளாளர் ஒருவர் சாவகச்சேரியிலுள்ள அவரது வீட்டிற்கு வரும்போது அவருடைய வாகனத்தை மறித்து குறித்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அந்த தருணத்தில், பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த இருவர், குறித்த ஊடகவியாளரை

முல்லைத்தீவில் கன மழை: மக்கள் பாதிப்பு!

Posted by - December 3, 2017

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கன மழையனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையினால் சிறிய குளங்கள் நிரம்பி வான் பாய்வதாக தெரியவருகிறது. அத்துடன் ஒட்டுசுட்டானில் பல்வேறு பகுதிகளில் வீடுகள், மற்றும் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

ஆசன பங்­கீடு குறித்து ஐ.தே.கவுடன் இறுதிச் சுற்றுப்பேச்சு இன்று.!

Posted by - December 3, 2017

உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தல்கள் தொடர்பில் ஐக்­கிய தேசிய முன்­னணி கட்சி தலை­வர்கள் இன்று  மாலை அலரி மாளி­கையில் சந்­தித்து இறுதிச் சுற்று பேச்­சு­வார்த்­தையில் ஈடு­ப­ட­வுள்­ளார்கள் என முற்­போக்கு கூட்­டணி மற்றும் ஜன­நா­யக மக்கள் முன்­னணி தலை­வரும், தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்­ச­ரு­மான  மனோ கணேசன் கூறி­யுள்ளார். அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறி­யுள்­ள­தா­வது, தமிழ் முற்­போக்கு கூட்­டணி போட்­டி­யி­ட­வுள்ள உள்­ளூ­ராட்சி சபைகள் தொடர்­பாக இது­வ­ரையில் நுவ­ரெ­லியா மாவட்ட உள்­ளூ­ராட்சி சபைகள் தொடர்­பி­லேயே 

சீரற்ற கால­நிலை உக்­கி­ர­ம­டை­யலாம்.!

Posted by - December 3, 2017

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை எதிர்­வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழ­மை­களில் உக்­கி­ர­ம­டை­ய­வுள்­ள­தாக கால­நிலை அவ­தான நிலையம் எதிர்­வு­கூ­றி­யுள்­ளது. எனவே குறித்த சீரற்ற கால நிலை தொடர்பில் வடக்கு, கிழக்கு  மக்கள் அவ­தா­ன­மாக இருந்­து­கொள்­ளு­மாறு அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. தெற்கு அந்­தமான் தீவு­களில் தற்­போ­தைக்கு தாழ­முக்கம் ஒன்று உரு­வா­கி­யுள்­ளது. அத்­தா­ழ­முக்கம் எதிர்­வரும் தினங்­களில் உக்­கி­ர­ம­டைந்து மத்­திய வங்­காள விரி­கு­டா­வி­னூ­டாக இந்­தியா நோக்கிப் பய­ணிக்­க­வுள்­ளது. அதற்­கி­ணங்க எதிர்­வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழ­மை­களில் அத்­தா­ழ­முக்கம்

சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பம்

Posted by - December 3, 2017

2018ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று (03) ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களத்தில் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது. இந்து சமயங்களின் நம்பிக்கைகளின்படி சிவனின் காலடி சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை (பாவா ஆதம் மலை)