ஊடகவியலாளரை தாக்க முற்பட்ட மர்ம நபர்கள்!!

364 0

முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத மர்ம நபர்கள் ஊடகவியளாளர் ஒருவர் மீது தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் நேற்று (சனிக்கிழமை) மாலை 06.25 அளவில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒலிபரப்பாகச் செயற்படும் யாழ்FM இல் கடமையாற்றும் ஊடகவியளாளர் ஒருவர் சாவகச்சேரியிலுள்ள அவரது வீட்டிற்கு வரும்போது அவருடைய வாகனத்தை மறித்து குறித்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அந்த தருணத்தில், பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த இருவர், குறித்த ஊடகவியாளரை பாதுகாக்க முற்பட்டுள்ளனர்.

அப்போது அவர்கள் மீதும் குறித்த மர்ம நபர்கள் மதுப் போத்தல்களால் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

முச்சக்கரவண்டியில் வந்த நபர்கள் அரசியல் ஆதிக்கம் உள்ள நபர் ஒருவரின் பெயரை அத்தருணத்தில் பயன்படுத்தி, பின்னர் அங்கிருந்து அதே முச்சக்கரவண்டியில் தப்பியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து பொலிசார் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

Leave a comment