69 இந்திய மீனவர்கள் விடுதலை
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 69 பேரை விடுவிக்குமாறு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் இன்று உத்தரவிட்டுள்ளன. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினரால் குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்களை விடுவிக்க யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. இந்த நிலையில் அவர்கள் 69 பேரையும் தாய் நாட்டுக்கு திருப்பியனுப்ப யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகம் நடவடிக்கைகள் எடுத்துவருகிறதென அதிகாரிகள்

