உள்ளுராட்சி சபைத் தேர்தல் வெற்றி புதிய அரசாங்கத்திற்கான அத்திவாரம்- நிமல்

209 0

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நாம் பெற்றுக் கொள்ளும் வாக்குகள் எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொள்வதற்கான ஓர் அத்திவாரமாகும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன  வெளியீட்டு நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஒரு கட்சிக்கோ அல்லது ஒரு குழுவுக்கோ அன்றி முழு நாட்டுக்கும் சவால் மிக்க ஒரு கால கட்டத்தில் நாம் தேர்தலுக்கு முகம்கொடுக்கின்றோம். எமக்கு மத்தியில் பல்வேறுபட்ட அரசியல் சிந்தனைகள் கொண்ட அரசியல் கட்சிகள் உள்ளன. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கீழ்  மக்களுக்காக இந்த வெற்றியை பெற்றுக் கொள்வோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a comment