சுமந்திரன், மனோ போன்று எங்களுக்கும் அதிரடிப்படை பாதுகாப்பு வேண்டும் – திகாம்பரம், ஹக்கீம்

548 0

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் அமைச்சர் மனோ கணேசனுக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அது போன்று தமக்கும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர்களான பழனி திகாம்பரம் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதி முக்கிய பிரபுகளுக்கு வழங்கப்படும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு அமைச்சர் அல்லாத சுமந்திரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மனோ கணேசனுக்கும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். கொழும்பு மாநகரசபை தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் மனோ கணேசனுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்களைப் போன்றே தமக்கும் அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகத் தெரிவித்து திகாம்பரம் மற்றும் ஹக்கீம் ஆகியோர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment