13 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
மன்னார் பாக்கு நீர் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து இழுவைப்படகுகளின் மூலம் மீன்பிடியில் ஈடபட்டதாக தெரிவித்து கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த 13 இந்திய மீனவர்களுக்கும் தொடர்ந்து விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 12.10.2017, அன்று ஐந்து இந்திய மீனவர்களும் 17.12.2017 அன்று எட்டு இந்திய மீனவர்களுமாக 13 இந்திய மீனவர்கள் இரு இந்திய இழுவைப் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டபோது இலங்கை மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு

