சில புகையிரத சேவைகள் இரத்து

226 0

புகையிரத சாரதிகள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக இன்று சில புகையிரத சேவைகளை ரத்து செய்ய நேர்ந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

இருப்பினும் அலுவலக ஊழியர்களின் நலன்கருதி சில புகையிரத சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக கட்டுப்பாட்டு நிலையத்தின் பேச்சாளர் இன்று காலை தெரிவித்தார்.

இதேவேளை, புகையிரத வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்படும் பயணிகளின் நலன்கருதி இலங்கை போக்குவரத்து சபை விசேட சேவைகளை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து சபை சார்ந்த சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் விடுமுறைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ள அதேவேளை, மேலதிக பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment